பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


6. நடிப்பும் முடிப்பும்

அந்த ஊரிலே அவன் ஓர் உத்தமமான விவசாயி. உலகநாதன் என்பது அவன் பெயர். யாருடைய பொருளுக்கும் ஆசைப்படாதவன். தர்ம சிந்தனையுள்ளவன். தனக்கு அதிக ‘சொத்து சுகம்’ வேண்டும் என்ற ஆசை அதிகம் உடையவனாக இருந்தாலும், நீதிக்கு மாறாக எதையும் செய்யத் துணியாதவன். அவன் ஆசையை அடக்கிக் கொண்டு, தன் வயலில் அயராது உழைத்து, செல்வம் சேர்த்து வைக்கப் பாடுபட்டுக் கொண்டிருந்தான்.

நல்லவன் ஒருவன் ஊரிலே இருந்தால், அவனை எல்லோருமா போற்றி விடுவார்கள்? ஏற்றுக் கொள்வார்கள்? அந்த ஊரிலே ஒருவன், சந்திரகாசன் என்பவன், சகல நல்லவனின் மதிப்பையும் மரியாதையையும் அழித்துக் கெடுத்து, கேவலப்படுத்தி விட வேண்டும் என்று அனுப்பி வைத்தான். அவனும் ‘இதோ சென்றேன் வென்றேன் வருகிறேன்’ என்று சபதம் கூறிவிட்டுப் புறப்பட்டான்.

சபதம் போட்ட சாமிநாதன் நேரே உலகநாதனிடம் சென்று வேலைக்காரனாக சேர்ந்து விட்டான். மிகவும் விசுவாசமுள்ள வேலைக்காரனாக நடித்தான். எள் என்பதற்குள் எண்ணெயாகி வேலை செய்தான். ‘வெட்டிவா என்றால் கட்டிக் கொண்டு, வந்து நின்றான். அவன் எண்ணம் என்ன என்பதை அறிந்து, எல்லாவற்றையும் முடித்துத் தந்ததால், உலகநாதன் உள்ளம் மகிழ்ந்து போனான். தன் உள்ளத்து ஆசையை மெதுவாக அவனிடம் வெளியிட ஆரம்பித்தான்.