பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/47

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் நோயில்லாமல் வாழலாம்

45



தன் வீட்டிற்கு யார் வந்தாலும் சரி, எந்தக் குறையும் இல்லாமல் கவனிப்பாள். உபசரிப்பாள். விருந்து வைப்பாள். பிறகு, அரசியல் பேசத் தொடங்கி தனக்குப் பிடிக்காதவர்களைப் பற்றி ஆரம்பித்து, ஒரு விரிவுரையே ஆரம்பித்துவிடுவாள். பேசுவது பொய் என்றாலும், தான் பேசுவதை உண்மைபோலவே கேட்பவருக்குச் சொல்வதில் கெட்டிக்காரி, அவள்.

அவளிடம் ஒரு காரியம் ஆகவேண்டும் என்றால் அவளுக்குப் பிடிக்காதவர்களைப் பற்றியே பேச ஆரம்பித்தால் போதும். விழுந்தடித்துக்கொண்டு உதவி செய்ய ஆரம்பித்து விடுவாள். காட்டு நெருப்பாக அவள் பேசும் செய்திகள் காற்றில் மற்றவர்கள் காதில் போய் மோதிக் கொண்டிருந்தன.

‘பிறரைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பவர்கள் பிணம் தின்னும் கழுகுகளுக்குச் சமமானவர்கள்’ என்று வேத நூல் கூறுவதை யார் கேட்கின்றார்கள்? தன்னைப் பற்றி, தன் தகுதியைப் பற்றி எண்ணாதவர்கள், செக்கு மாட்டுக்குச் சமமானவர்கள்.

என்ன செய்யப் போகிறோம் என்று திட்டமிடாமல் நடப்பவர்கள், ராட்டினத்தில் குதிரையேறிப் பயணம் செய்பவர் போலத்தான். வதந்தி பரப்பும் வனிதாமணியின் வாயில் வீழ்ந்து வதைப்பட்டவர்கள் பலர் என்றாலும் வதைப்பட்டவர்கள் தங்கள் வேலையைக் கவனித்துக் கொண்டே போய்க் கொண்டிருந்ததால், வனிதாமணிக்குத் திமிர் துளிர்விட்டுப் போயிருந்தது.

‘வெந்நீரே தன்னை சூடேற்றிய நெருப்பையும் அணைக்கும். வளர்த்த கிளையே கோடாரிக் காம்பாக