பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 ஆரம்ப வெற்றி ஒருவரை நிலைகொள்ளாமல் நிதானம் இழக்கச் செய்தும், படு வீழ்ச்சிக்கான பாதையில் நடக்கக் செய்தும், பெரிய துர்ப்புத்தியைத் தந்து விடும். ஆனல், தோல்வியோ நிதானமாக காலத்தின் ஏற்றத்திற்கு உதவும். திடமான படிக்கட்டுகளாக அமைந்து ஆக்கம் தருவதாக அமைந்திருக்கிறது இதல்ை என்ன நேரும் என்று நீங்கள் கேட்கலாம்?. தோல்வி நேரங்களில் துணிந்து நின்றவர்களும், முயற்சி. யைத் தொடர்ந்தவர்களும் தான், சிறந்த மனிதர்களாக, மேதைகளாக, வீரர்களாக, தலைவர்களாக வாழ்க்கையில் உயர்ந்து, சிறப்பையும், விரிந்த புகழையும் பெற்று உயர்ந் திருக்கின் ருர்கள். முன்னேறிய ஒவ்வொரு மனிதனும், தோல்வியில் விழுந்து புரண்டு எழுந்து வந்தவர்களே, அந்தத் தோல்வி கள் அவர்களுக்குப் புகழார்ந்த தோல் விகளாகும். தோல்வியைத் தவிர்த்து வெற்றியைப் பரிசாகப் பெறுவது தான் ஒவ்வொரு மனிதனின் உன்னத லட்சியமாக இருக்கிறது. எப்படி அந்த வெற்றியைப் பெறுவது?..... வெற்றி என்பது சக்தியில்ை விளைவது. சக்தி என்பது ஒன்றுபட்ட ஒழுங்குபட்ட, புத்திசாலித்தனமான அறிவில்ை விளைவதாகும். அத்தகைய மன எழுச்சி, மிகுந்த மதிநுட்ப மும் உடல் சக்தியும் தான் எப்பொழுதும் வெற்றியை நல்கும். வாழ்க்கைப் பயணமே தடைகள் நிறைந்ததாகும், உடல் திறமும் நெஞ்சுரமும் நிறைந்தவர்களே தடைகளைத் தாண்ட முடியும். பயணத்தில் மகிழ்ச்சியையும் சுவைகளையும் எய்திட topis) யும்.