பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி.சு. அவினாசிலிங்கம் it 9

ஆணவம் தொனித்தது "எல்லாரும்" என்பதில் ஆசிரியர்களும் அடங்குவர் என்பது அவர் மதியில் ஒளிரவில்லை. காரணம், "தாங்கள்தாம் விடுதலை வாங்கித் தந்த மாமேதைகள்" என்று கருதிக் கொண்டிருந்தது அவர்கள் திருவாயினின்றும் பேசாத பேச்சாகத்" தொனித்தது. "தாங்கள்தாம் மன்னர்கள்" என்று எண்ணிக் கொள்ளட்டும். அதைப் "பட்டிமன்றம்" அமைத்து மறுக்கவில்லை. "ஆசிரியர்களும் நாட்டின் அடிப்படைத் தொண்டர்கள்" என்றாவது நினைத்து மனிதாபிமானத்துடன் மறுமொழி கூறியிருக்கலாம். அது செய்யவில்லை. வருங்காலத்தில் தலைக் கொழுப்பாக நிற்கும் இந்த ஆணவத்தால் என்னென்ன “திருவிளையாடல்கள்" நடைபெறப் போகின்றனவோ என்று என் சிறுமணம் எண்ணத் தொடங்கியது. உடனே அதையும் மறந்தது. தமிழகத்தில் 18 ஆண்டுகட்குமேல் காங்கிரசு ஆட்சி நிலைக்கவில்லை

எப்படியாவது அமைச்சரை மடக்கி மாநாட்டில் பேச வைக்க வேண்டும் என்ற எண்ணம் என் மனத்தில் உதித்தது. மாநாட்டுத் தலைவர் இராமய்யரிடம் இதைத் தெரிவித்தேன். அவர் என் நோக்கத்திற்குப் பச்சைக்கொடி காட்டினார். சுமார் மாலை 4.30க்கு காங்கிரசு மாநாடு முடிந்து தலைவர்கள் கலைந்து திரும்பத் தொடங்கினர். ஆசிரியர் மாநாடு ஒரு புளியந்தோப்பில் நடைபெற்றது. சாலையின் மேல்புறம் சுமார் 4 அடி பள்ளத்தில் இந்தத் தோப்பு இருந்தது. வாகனங்களை நகரவிடாது நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் தடுத்து நின்றனர். "கல்வி அமைச்சர் வாழ்க" என்ற முழக்கம் விண்ணை எட்டியது. "ஆசிரியர் மாநாட்டில்" என்று ஒரு கூட்டம் முழங்க, மற்றொரு கூட்டம், "அமைச்சர் பேசவேண்டும்" என்று எதிரொலித்தது.

காங்கிரசு கூட்டம் தம்பித்துப் போயிற்று அமைச்சர் அவினாசிலிங்கம், காரிலிருந்து குதித்தார். ஆசிரியர் கூட்டத்தை நோக்கி ஓடி வந்தவர் வரவேற்ற என்னைக் கட்டித் தழுவிக் கொண்டார். மாநாட்டில் உணர்ச்சியுடன் பேசினார். எங்கள் கோரிக்கைகளை எழுத்துமூலம் அவரிடம் தந்தோம். அன்புடன் ஏற்றுக் கொண்டார். புன்முறுவலுடன் "கவனிக்கின்றேன்" என்றார்