பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி.சு. அவினாசிலிங்கம் 135

(6)

வாய்ப்பும், அதற்கு ஏற்ற உடல்நிலையையும் பொருளுதவியையும் அருளி வருகின்றான். "என் கடன் பணிசெய்து கிடப்பதே"

நிரந்தரமான பழைய துணையாசிரியர்கள், பிழை திருத்துபவர் ஆகியவர்கள் மூவர் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின்மீது வழக்கு தொடுத்தனர் ஒன்றிரண்டு ஆண்டுகள் வழக்கு இழுபறியாகக் கிடந்து பிறகு ரூ. 18,000/- நட்டஈடு தருமாறு முடிவு ஏற்பட்டதாகக் கேள்வி. நான் என் வழியில் சென்றதால் எதையும் உசாவி அறிவதில்லை. இவர்களில் திரு சிறுவை மோகன சுந்தரம் மட்டிலும் இன்று இல்லை. சில ஆண்டுகட்கு முன்னர் திருநாடு அலங்கரித்துவிட்டார் ஏனையோர்பற்றி அறியக்கூடவில்லை. திரு. வச்சிரவேலு மட்டிலும் தட்டச்சராக இன்றும் இருந்து வருகின்றார் திரு. சோமசுந்தரம் அவர்கள் தலைமையில் சில பணிகள் நடைபெற்றுவருகின்றன.