பக்கம்:நீதிக் களஞ்சியம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

மனம் போன போக்கு எல்லாம் போசுவேண்டாம்;
      மாற்றானை உறவு என்று நம்பவேண்டாம்;
தனம் தேட உண்ணாமல் புதைக்கவேண்டாம்;
      தருமத்தை ஒரு நாளும் மறக்கவேண்டாம்;
சினம் தேடி, அல்லலையும் தேடவேண்டாம்;
      சினந்திருந்தார் வாசல் வழிச் சேறல்வேண்டாம்;—
வனம் தேடும் குறவருடை வள்ளி பங்கன்
      மயில் ஏறும் பெருமாளை வாழ்த்தாய், நெஞ்சே!3

குற்றம் ஒன்றும் பாராட்டித் திரியவேண்டாம்;
      கொலை களவு செய்வாரோடு இணங்கவேண்டாம்;
கற்றவரை ஒரு நாளும் பழிக்கவேண்டாம்;
      கற்புடைய மங்கையரைக் கருதவேண்டாம்;
கொற்றவனோடு எதிர்மாறு பேசவேண்டாம்;
      கோயில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம்;-
மற்று நிகர் இல்லாத வள்ளி பங்கன்
      மயில் ஏறும் பெருமாளை வாழ்த்தாய், நெஞ்சே!3

வாழாமல் பெண்ணை வைத்துத் திரியவேண்டாம்;
      மனையாளைக் குற்றம் ஒன்றும் சொல்லவேண்டாம்;
வீழாத படு குழியில் வீழவேண்டாம்;
      வெஞ்சமரில் புறங்கொடுத்து மீளவேண்டாம்;
தாழ்வான குலத்துடனே சேரவேண்டாம்;
      தாழ்ந்தவரைப் பொல்லாங்கு சொல்லவேண்டாம்;—
வாழ்வு ஆரும் குறவருடை வள்ளி பங்கன்
      மயில் ஏறும் பெருமாளை வாழ்த்தாய், நெஞ்சே!3

வார்த்தை சொல்வார் வாய் பார்த்துத் திரியவேண்டாம்;
      மதியா தார் தலைவாசல் மிதிக்கவேண்டாம்:
மூத்தோர் சொல் வார்த்தைதனை மறக்கவேண்டாம்;
      முன்கோபக்காரரோடு இணங்கவேண்டாம்;
வாத்தியார் கூலியை வைத்திருக்கவேண்டாம்;
      வழி பறித்துத் திரிவாரோடு இணங்கவேண்டாம்:—
சேர்த்த புகழாளன் ஒரு வள்ளி பங்கன்
     திருக்கை வேலாயுதனைச் செப்பாய், நெஞ்சே!3

நீ.க.—3