பக்கம்:நீதிக் களஞ்சியம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

கலைமகள் வாழ்க்கை முகத்தது எனினும்,
மலரவன் வண் தமிழோர்க்கு ஒவ்வவான்:—மலரவன் செய்
வெற்று உடம்பு மாய்வனபோல் மாயா, புகழ் கொண்டு
மற்று இவர் செய்யும் உடம்பு.6

நெடும் பகல் கற்ற, அவையத்து, உதவாது
உடைந்துளார் உட்குவரும் கல்வி, கடும் பகல்
ஏதிலான்பால் கண்ட இல்லினும் பொல்லாதே;
தீது என்று நீப்பு அரிதால்.7

வருந்தித் தாம் கற்றன ஓம்பாது, மற்றும்
பரிந்து சில கற்பான் தொடங்கல்,—கருத் தனம்
கைத்தலத்த உய்த்துச் சொரிந்திட்டு, அரிப்பு அரித்து ஆங்கு,
எய்த்துப் பொருள் செய்திடல்.8

எனைத் துணையவேனும், இலம்பாட்டார் கல்வி
தினைத் துணையும் சீர்ப்பாடு இலவாம்;—மனைத்தக்காள்
மாண்பு இலள் ஆயின், மணமகன் நல் அறம்
பூண்ட புலப்படாபோல்.9

இன்சொல்லன் தாழ்நடையன் ஆயினும், ஒன்று இல்லானேல்,
வன் சொல்லின் அல்லது வாய் திறவா: என் சொலினும்
கைத்துடையான் காற்கீழ் ஒதுங்கும், கடல் ஞாலம்;
பித்து உடைய; அல்ல, பிற.10

இவறன்மை கண்டும், உடையாரை யாரும்
குறையிரந்தும் குற்றேவல் செய்;—பெரிதும் தாம்
முற்பகல் நோலாதார், நோற்றாரைப் பின் செல்வல்
கற்பு அன்றே; கல்லாமைஅன்று.11

கற்றார்க்குக் கல்வி நலனே கலன் அல்லால்,
மற்று ஓர் அணிகலம் வேண்டாவாம்; முற்ற
முழு மணிப் பூணுக்குப் பூண் வேண்டா; யாரே,
அழகுக்கு அழகு செய்வார்?12

முற்றும் உணர்ந்தவர் இல்லை: 'முழுவதூஉம்
கற்றனம்!' என்று களியற்க;—சிற்றுளியால்
கல்லும் தகரும்; தகரா, கனங்குழாய்!
கொல் உலைக் கூடத்தினால்.13