பக்கம்:நீதிக் களஞ்சியம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

தம்மின் மெலியாரை நோக்கி, தமது உடையை
'அம்மா, பெரிது!' என்று அகம் மகிழ்க; தம்மினும்
கற்றாரை நோக்கிக் கருத்து அழிக, கற்றது எல்லாம்
எற்றே இவர்க்கு நாம்!' என்று.14

கல்வி உடைமை, பொருள் உடைமை என்று இரண்டு
செல்வமும் செல்வம் எனப்படும்—இல்லார்
குறை இறந்து தம் முன்னர் நிற்பபோல், தாமும்
தலை வணங்கித் தாழப் பெறின்.15

ஆக்கம் பெரியார், சிறியாரிடைப்பட்ட
மீச்செலவு காணின், நனி தாழ்ப— தூக்கின்,
மெலியது மேல்மேல் எழச் செல்லச் செல்ல,
வலிது அன்றே தாமும், நுலைக்கு?16

விலக்கிய ஓம்பி, விதித்தனவே செய்யும்
நலத்தகையார் நல்வினையும் தீதே;— 'புலப்பகையை
வென்றனம்; நல் ஒழுக்கின் நின்றேம், பிற' என்று,
தம் பாடு தம்மில் கொளின்.17

தன்னை வியப்பிப்பான் தற் புகழ்தல் தீச் சுடர்
நல் நீர் சொரிந்து வளர்ந்தற்றால்;— தன்னை
வியவாமை அன்றே வியப்பு ஆவது; இன்பம்
நயவாமை அன்றே நலம்.18

பிறரால் பெருஞ் சுட்டு வேண்டுவான், யாண்டும்
மறவாமே நோற்பது ஒன்று உண்டு: பிறர் பிறர்
சீர் எல்லாம் தூற்றி, சிறுமை புறங்காத்து,
யார் பார்க்கும் தாழ்ச்சி சொலல்.19

கற்று, பிறர்க்கு உரைத்து, தாம் நில்லார் வாய்ப்படூஉம்
வெற்றுரைக்கு உண்டு, ஓர் வலி உடைமை:— 'கொற்ற நீர்
நில்லாதது என்?' என்று நாண் உறைப்ப, நேர்ந்து ஒருவன்
சொல்லாமே, சூழ்ந்து சொலல்.20

பிறர்க்குப் பயன் படத் தாம் கற்ற விற்பார்,
தமக்குப் பயன் வேறு உடையார்;—திறப்படூஉம்
தீவினை அஞ்சா விறல் கொண்டு, தென்புலத்தார்
கோவினை வேலை கொளல்.21