பக்கம்:நீதிக் களஞ்சியம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

கற்பன ஊழ் அற்றார், கல்விக் கழகத்து ஆங்கு
ஒற்கம் இன்று ஊத்தை வாய் அங்காத்தல், மற்றுத் தம்
வல் உரு அஞ்சன்மின், என்பவே,மா, பறவை
புல்லுரு அஞ்சுவபோல்.22

போக்கு அறு கல்வி புலம் மிக்கார்பால் அன்றி
மீக்கொள் நகையினார்வாய்ச் சேரா;—தாக்கு அணங்கும்
ஆண் அவாம் பெண்மை உடைத்து எனினும், பெண் நலம்
பேடு கொளப்படுவது இல்.23

கற்றன கல்லார் செவி மாட்டிக் கையுறூஉம்
குற்றம் தமதே; பிறிது அன்று; முற்று உணர்ந்தும்.
தாம், அவர் தன்மை உணராதார், தம் உணரா
ஏதிலரை நோவது எவன்?24

வேத்தவை காவார், மிகல் மக்கள்; வேறு சிலர்
காத்தது கொண்டு ஆங்கு உகப்பு எய்தார்;—மாத் தகைய
அந்தப்புரத்தது பூஞை புறங்கடைய,
கந்து கொல் பூட்கைக் களிறு.25

குலமகட்குத் தெய்வம் கொழுநனே; மன்ற
புதல்வர்க்குத் தந்தையும் தாயும்; அறவோர்க்கு
அடிகளே தெய்வம்; அனைவோர்க்கும் தெய்வம்,
இலை முகப் பைம் பூண் இறை.26

கண்ணில் சொலிச் செலியின் நோக்கும் இறைமாட்சி
புண்ணியத்தின் பாலதே ஆயினும்,—தண்ணளியால்
மன்பதை ஓம்பாதார்க்கு என் ஆம்? வயப் படை மற்று
என் பயக்கும், ஆண் அல்லவர்க்கு?27

குடி கொன்று இறை கொள்ளும் கோமகற்குக் கற்றா
மடி கொன்று பால் கொளலும் மாண்பே: குடி ஓம்பிக்
கொள்ளுமா கொள்வோற்குக் காண்டுமே, மா நிதியம்
வள்ளத்தின் மேலும் பல.28

இன்று கொளற்பால நாளைக் கொளப் பொறான்;
நின்று குறை இரப்ப. நேர்படான்; சென்று ஒருவன்
ஆவன கூறின், எயிறு அலைப்பான்; ஆறு அலைக்கும்
வேடு அலன், வேந்தும் அலன்.29