பக்கம்:நீதிக் களஞ்சியம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37

இடை தெரிந்து, அச்சுறுத்து, வஞ்சித்து, எளியார்
உடைமை கொண்டு, ஏமாப்பார் செல்வம், மட நல்லார்
பொம்மல் முலைபோல் பருத்திடினும், மற்று அவர்
நுண் இடை போல் தேய்ந்து விடும்.62

பெற்ற சிறுக, பெறாத பெரிது உள்ளும்
சிற்றுயிர்க்கு ஆக்கம் அரிது அம்மா!—முற்றும்
வழ வர வாய்மடுத்து. வல் விராய் மாய,
எரி தழல் மாயாது இரா.63

தம் தம் நிலைக்கும் குடிமைக்கும் தப்பாமே,
ஒத்த கடப்பாட்டில் தாள் ஊன்றி, எய்த்தும்
அறங்கடையில் செல்லார். பிறன் பொருளும் வெஃகார்
புறங்கடையது ஆகும், பொருள்.64

பொதுமகளே போல்ப, தலையாயார் செல்வம்;
குலமகளே, ஏனையோர் செல்வம்; கலன் அழிந்த
கைம்மையார் பெண்மை நலம்போல், கடையாயார்
செல்வம் பயன்படுவது இல்.65

வள்ளன்மை இல்லாதான் செல்வத்தின், மற்றையோன்
நல்குரவே போலும் நனி நல்ல; கொன்னே
'அருள் இலன், அன்பு இலன், கண்ணறையன்' என்று
பலரால் இகழப்படான்.66

ஈகை அரிது எனினும், இன்சொலினும், நல்கூர்தல்
ஓஓ கொடிது கொடிது அம்மா:—நா கொன்று
தீவினைக் கம்மியனால் வாய்ப்பூட்டு இடப்படின், மற்று
ஆ! ஆ! இவர் என் செய்வார்?67

சொவ்வன்மை உண்டு எனின், கொன்னே விடுத்து ஒழிதல்
நல்வினை கோறலின் வேறு அல்ல; வல்லைத் தம்
ஆக்கம் கெடுவது உளது எனினும், அஞ்சுபவோ,
வாக்கின் பயன் கொள்பவர்?68

சிறு முயற்சி செய்து ஆங்கு உறு பயன் கொள்ளப்
பெறும் எனில், தாழ்வரோ? தாழார்—அறன் அல்ல
எண்மைய ஆயினும் கைவிட்டு, அரிதுஎனினும்
ஒண்மையின் தீர்ந்து ஒழுகலார்.69