பக்கம்:நீதிக் களஞ்சியம்.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆத்திசூடி
(ஔவையார்)
கடவுள் வாழ்த்து

ஆத்திசூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம், யாமே.


நூல்

அறம் செய விரும்பு. 1
ஆறுவது சினம்.2
இயல்வது கரவேல்.3
ஈவது விலக்கேல்.4
உடையது விளம்பேல்.5
ஊக்கமது கைவிடேல்.6
எண், எழுத்து, இகழேல்.7
ஏற்பது இகழ்ச்சி.8
ஐயம் இட்டு, உண்.9
ஒப்புரவு ஒழுகு.10
ஓதுவது ஒழியேல்.11
ஔவியம் பேசேல்.12
அஃகம் சுருக்கேல்.13

கண்டு ஒன்று சொல்லேல்.14
ஙப்போல் வளை15