பக்கம்:நீதிக் களஞ்சியம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

அன்பொடு அருள் உடையரேனும், உயிர் நிலை மற்று
என்பு இயக்கம் கண்டும், புறந்தரார்;—புன் புலால்
பொய்க் குடில் ஓம்புவரோ, போதத்தால் தார் வேய்ந்து
புக்கில் குடி புகுதுவார்?86

சிற்றின்பம் சில் நீரது ஆயினும்,அஃது உற்றார்
மற்று இன்பம் யாவையும் கைவிடுப; முற்றும் தாம்
பேர் இன்ப மாக் கடல் ஆடுவார் வீழ்பவோ,
பார் இன்புப் பாழ்ங் கும்பியில்?87

எவ் வினையரேனும், இணைவிழைச்சு ஒன்று இலரேல்,
தெவ்வும் திசை நோக்கிக் கைதொழூஉம்; அவ் விளை
காத்தல் இலரேல், எனைத் துணையர் ஆயினும்,
தூர்த்தரும் தூர்ப்பார், அலர்.88

பரபரப்பினோடே பல பல செய்து, ஆங்கு
இரவு பகல் பாழுக்கு இறைப்ப; ஒருவாற்றான்
நல் ஆற்றின் ஊக்கின் பதறிக் குலைகுலை:
எவ்வாற்றான் உய்வார் இவர்?89

'இளையம்; முது தவம் ஆற்றுதும் நோற்று'` என்று,
உளைவு இன்று கண்பாடும் ஊழே, விளிவு இன்று
வாழ்நாள் வரம்பு உடைமை காண்பரேல்; காண்பாரும்,
தாழாமே நோற்பார், தவம்.90

நல்லவை செய்யத் தொடங்கிலும், நோனாமே
அல்லன அல்லவற்றின் கொண்டு உர்க்கும்—எல்லி
வியல் நெறிச் செல்வாரை ஆறு அலைத்து உண்பார்
செலவு பிழைத்து உய்ப்பபோல்.91

நெஞ்சு புறம்பாத் துறந்தார் தவப் போர்வை
கஞ்சுகம் அன்று; பிறிது ஒன்றே;—கஞ்சுகம்
எப் புலமும் காவாமே, மெய்ப் புலம் காக்கும்; மற்று
இப் புலமும் காவாது இது.92

வஞ்சித்து ஒழுகும் மதியிலிகாள்! 'யாவரையும்
வஞ்சித்தேம்' என்று மகிழன்மின்; 'வஞ்சித்த
எங்கும் உளன் ஒருவன் காணுங்கொல்!' என்று அஞ்சி
அங்கம் குலைவது அறிவு.93