பக்கம்:நீதிதேவன் மயக்கம்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதிதேவன் மயக்கம் காட்சி - 1 இருண்ட வானம் (இடி மின்னலுடன் காற்று பலமாக அடிக்கிறது. இந்த பேரிரைச்சலுக்கிடையே ஏதோ, குரல் கேட்டுக் கொண்டிருந்தது.) ஆண்டவன் : நீதிதேவா நீதிதேவா! (பதில் ஏதும் இல்லை. மீண்டும் அதிகார தொனியில் அழைக்கிறார்.) ஆண்டவன் நீதிதேவா நான் அழைப்பது உன் காதில் விழவில்லையா? நீதிதேவா (நீதிதேவன், முன்வந்து ஆகாயத்தைப் பார்த்து, வணங்கி நிற்கிறார்.) ஆண்டவன் : நீதிதேவா! பூலோகத்திலே புதுக்கருத்துகள் பரவி விட்டனவாம். பழைய நிகழ்ச்சிகளுக்கு, நாம் கூறின. முடிவுகள், தீர்ப்புகள் தவறு என்று புகார் கிளம்பி விட்டது. ஆகவே இனி பழைய தீர்ப்புகள், செல்லுபடியாகா என்று கூறி விடுவார்கள். போலிருக்கிறது. இதை உத்தேசித்து புனர் விசாரணை நீதிமன்றம் நியமித்திருக்கிறேன். இராவணன் குற்றவாளிதான். இலங்கை அழிந்தது நியாயமே. இராவணன் இரக்கமற்ற அரக்கன் என்பதுதானே கம்பரின் குற்றச்சாட்டுகள். அதனால் அந்த வழக்கை முதலில் எடுத்துக் கொள்ளுங்கள். உடனே நீதிமன்றம் கூட ஏற்பாடுகள் நடக்கட்டும்.