பக்கம்:நீதிதேவன் மயக்கம்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதிதேவன் மயக்கம் .27 சூர்ப்பனகை ஓர் ஓலையைக் கொடுக்கிறாள்... கோர்ட்டிலே ஒருவர் அதை வாசிக்கிறார்.] இராம இலட்சுமணரைக் காட்டிலே கண்டேன். மூத்தவரிடம் மோகம் கொண்டேன். எவ்வளவோ எடுத்துக் கூறினேன். காதல் கனலாகி என்னைத் தகித்தது. மன்றாடினேன்..!!! இரா : கொஞ்சம் நிறுத்து! நீதிதேவா! ஒரு பெண்; அரச குடும்பத்தவள், அதிலும் வணங்காது வாழ்ந்து வந்த என் தங்கை வலிய சென்று, தன் காதலை வாய் விட்டுக் கூறினாள். இராமன் மறுத்தான்... ஏன்? கம்: இது தெரியாதா? ஸ்ரீராமச்சந்திரர் ஏகபத்தினி விரதர். இரா : ஏகபத்தினி விரதம் என்ற இலட்சியத்திலே அவருக்குப் பற்றுதல். கம்: ஆமாம்! இரா : அந்த இலட்சியத்தை அவர் பெரிதென மதித்தார். கம்: பெரிதென மட்டுமல்ல, உயிரென மதித்தார். இரா : தாம் உயிரென மதித்த இலட்சியத்தின்படி நடந்து கொள்ள வேண்டுமென்று, ஒரு மங்கையின் கண்ணீரைக் கண்டால் இயற்கையாக இரக்கத்தை இரவிகுல சோமன் தள்ளிவிட்டார். கம் : இரக்கம் காட்டுவதா இந்தத் தூர்த்தையிடம்?

  • . -

இரா : காதலைத் தெரிவிப்பவர் தூர்த்தையா? 67 வரும் கம் : இஷ்டமில்லை என்று கூறினபிறகு, வலிய சென்று மேலே விழுவது, உயர்குல மங்கையின் பண்போ? இரா : கம்பரே! என் தங்கை சூர்ப்பனகை கண்ட ஆடவர் மீது காமுற்றுக் கருத்தழிந்தவளா? இராமனைக் காணுமுன்பு, அன்று நடந்து கொண்டது போல என்