பக்கம்:நீதிதேவன் மயக்கம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 அறிஞர் அண்ணா இரா : கூறினீர்! வேறோர் சமயம் திருத்திக் கொள்ளும். சரி ஊரார் கண்டபடி ஏசினர். ஆனால் கேகயகுமாரியின் மனம் மாறவில்லை. நீதி: ஆமாம்! கொஞ்சமும் இரக்கமில்லை. இரா : அரக்கமாதல்ல, நீதிதேவா! கைகேயி அம்மை! தசரதன் சோகமுற்று 'மானே! மடமயிலே! கேகயன் மகளே கேளடி என் மொழியை! பேயும் இரங்குமே பெண்கட்கரசே! நீ இரங்காயோ?” என்று எவ்வளவோ கெஞ்சினான். கைகேயி மன்னனின் புலம்பலைக் கேட்டும் மனம் இளகவில்லை. மன்னன் மூர்ச்சித்துக் கீழே விழுந்தான். அம்மையின் மனதிலே இரக்கம் எழவில்லை. கம்பர் கூறினார். மன்னர் பலர், எந்தத் தசரதனின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார்களோ, அப்படிப்பட்ட மன்னர் மன்னன் கைகேகியின் காலிலே விழுந்தான். கைகேசி சூழ்வினைப் படலம் 25வது செய்யுள். தன் மணாளன், மன்னர் மன்னன் தன் காலில் விழுந்து அழுது, கெஞ்சி, 'எனக்கு உயிர்ப்பிச்சை தர வேண்டும். என் மகன் இராமன் நாடாளாவிட்டால் போகிறது; காடு போகச் செய்யாதே! அவன் போனால் என் உயிர் நில்லாதே!" என்று உள்ளம் உருகிக் கதறுகிறான். கேகயகுமாரி அப்போதாவது இரக்கம் காட்டினதுண்டா? இல்லை! கோசலை அழுதபோது? இல்லை! சீதை மரவுரி தரித்தபோது? இல்லை! ஊரே புரண்டு அழுதபோது? இல்லை! துளியும் இரக்கம் காட்டியதில்லை. வெற்றி பெற்றோம் என்ற களிப்புடன் அன்றிரவு துயிலில் நிம்மதியாக ஈடுபட்டார்களாம்! கம்பர் கூறியுள்ளார். உண்மைதானே கம்பரே? கம்: உண்மைதான்! இரா : இரக்கம் என்ற ஒரு பொருள் இல்லாதோர் அரக்கர் உமது இலக்கணமல்லவா அது? கைகேயி அம்மையிடம் அந்த இரக்கம் ஒரு துளியும் இல்லையே! என், அரக்கர் ..