பக்கம்:நீதிதேவன் மயக்கம்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதிதேவன் மயக்கம் 59 காட்சி 11 பாதை இராவணன், நீதிதேவன் வருதல் நீதிதேவா, போதுமல்லவா? இரக்கத்தின் பல வகை உருவங்கள் விளைவுகள். நீதி : என்னால் காணவும் சகிக்க முடியவில்லை. காதால் கேட்கவும் முடியவில்லை. அன்னை ஜானகியே இவ்வளவு வேதனைப்படுகிறாரே, அய்யனின் இரக்கமிலா செயல் கண்டு. . இரா : உண்மை அதுவாக இருக்கிறதே தேவா. இரக்கம் கொள்ளாதார் பலர் உளர். அது அவரவர்களுக்கு ஏற்பட்ட சூழ்நிலை. இரக்கம் உச்சரிப்பதற்கு எளிய பதம், இனிமையுங் கூட. வாழ்க்கையிலே இரக்கத்தைத் தேடிப் பயணம் நடத்துவதோ - அலைகடலிலே பாய்மரமற்ற கலம் செல்வது போலத்தான். வாருங்கள் போகலாம். [காட்சி முடிவு] காட்சி 12 நீதிதேவன் மாளிகை நீதிதேவன் சோகமே உருவாக, சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறார். அப்போது உள்ளே நுழைகிறான், பணியாள். பணி: தேவா, பூலோகத்தில் தாங்கள் கண்ட காட்சிகளிலேயே, இன்னும் மனம் இலயத்திருக்கிறீரா? இல்லை, இலங்கேசன் தன்னுடைய அரக்கக் குணத்தை தங்களிடமும் காட்டி விட்டானா? கலக்கத்துக்கு என்ன சுவாமி காரணம்? இல்லை, என் காதில் பட்டவை தங்கட்கும் எட்டி விட்டதா?