一臀一 சேல்வர் பலருடைய உதவி பெற்று வாழ்வதால், அவர்களும் காட்டில் பிறர்க்குத் தொண்டு புரியக் கடமைப்பட்டுள்ளார். இவர் எம் முறையில் தொண்டு புரிவது எனில் மக்கள் வறுமையால் வாடும்போது அவ்வாட்டத்தைப் போக்கப் பொருள் உதவி புரியும் தொண்டை மேற்கொள்ளலாம். உடற்கட்டு அமைக் தவர். பலமற்றவர்கட்கு எடுத்தல், பிடித்தல் முதலான தொண்டினப் புரியலாம். ஆபத்து வந்துற்ற போது அதனைத் தீர்க்க முற்பட வேண்டும். வீடு தீப் பற்றி எரிகையில் ' அது நம் வீடு அன்று ' என்று இருந்து விடாமல், அதனை அணைத்தற்கு முந்துதல் வேண்டும். கைர்யத்துடன் எரியும் வீட்டில் நுழைந்து உள்ளே அகப்பட்டிருக்கும் மக்கள் வெளிவர உதவி செய்ய வேண்டும். இது சிறந்த தொண்டு என்று கூறவும் வேண்டுமோ? கோய்வாய்ப்பட்டவர்கட்கு மருந்து உதவலும் கடக்க வசதியற்றவர்கட்கு அவர்கள் இருக்கும் இடத்தை நாடிச்சென்று அவர்கட்கு வேண்டுவன ஈதலும் தொண்டின் பால்படும். அந்தத்தருணம் சாதி மத வேறுபடு கருதுதல் கூடாது. கல்வி அறிவு பெருத மக்களிடையே சென்று கல்வி பரப்புதற் குளிய வழிகளில் சொற்பொழிவு மூலம் கல்வியைப் பரப்ப வேண்டும். இராப்பள்ளிக் கூடங்கள் வைத்துக் கல்வியினைப் போதிக்கவேண்டும். அப்படிப் போதிக்
பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/42
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a1/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.pdf/page42-579px-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.pdf.jpg)