பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயர்திரு. கே. எம். வேங்கடராமையா M.A., B.O.L. அவர்கள் இத் தொகுப்பு சிறப்புற அமைய தனக்கென உரியமுறையில் தொடக்க உரையும், தமிழில் பொழிப்புரையும், ஆங்கில மொழிபெயர்ப்பும் எழுதி அணி செய்துள்ளார்கள். இந் நூலுக்குப் பாராட்டுரை வாகீச கலாநிதி உயர்திரு. கி. வா. ஜகந்நாதன், ஆசிரியர் கலைமகள் அவர்கள் வழங்கியுள்ளார்கள். இப்பெருமக்கள் இருவர்க்கும் என் உளம்கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நூல் அச்சிடுங்கால் தனது அரிய கருத்துக்களே வழங்கியும் பிழை திருத்தங்கள் செய்தும், என்னை ஊக்குவித்த வித்துவான் திரு. கே.எம். கிருஷ்ணமூர்த்தி தமிழாசிரியர் அவர்க்கும், திரு K.M. கோபிநாதன் B.Sc அவர்கட்கும், திரு நாகர்கோவில் கிருஷ்ணன் அவர்கட்கும் இந்நூலைச் சிறப்பான முறையில் அச்சிட்டுதவிய திரு. நாரா நாச்சியப்பன் அவர்கட்கும் என் நன்றிகளைத் தெரி வித்துக் கொள்கிறேன்.

நீத்தார் வழிபாடு மிக முக்கியமானது என்பதை நான் சொல்லவேண்டுவது இல் கல. தென்புலத்தார் ஆகும் அந்நீத்தார்க் குரிய பாடல்களைப் பாடி அவர் உய்தி பெறவும், அவர்பொருட்டு நாம் பாடவும் உள்ள இந் நூ8ல நெட்டால் வைதீகசபை எங்கும் பரப்புவ தோடு அதற்குத் துணையாக தென் குப்பிரிக்காவில் உள்ள எல்லாச் சங்கங்களும், உலகத்தில் எல்லாப் பாகங்களிலும் வாழும் தமிழர் களும், அவர்களது சங்கங்களும், இந்நூலேப் பயன்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்ய அனைவரையும் பணி வன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

N. C. NAIDOO Chairman

Natal Tamil Vedic Society, (Provincial Body)