பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20


வழி நடந்து செல்லும்போது அவளுக்குக் களை ப்பு அதிகமாகிவி ட்டது. அவள் பாதை யோரத்தில் இருந்து கொண்டு அழத் தொடங்கினாள். அப்போது ஒரு பெரிய குதிரை தாவியோடி வந்தது. அது சேனமிட்டுக் கடிவாளம் பூட்டப்பட்டிருந்தது. அதன் முதுகில் போர்த்தியிருந்த பட்டாடையில் வைரம் பதித்திருந்தது. அது ஜகஜோதியாய் மின்னியது. அது சந்திரிகாவைக் கண்டவுடன் நின்று அவளருகில் மேய ஆரம்பித்தது. பார்ப்பதற்கு அவளைத் தன் முதுகில் ஏறிக் கொள்ளும்படி அது செய்வது போலிருந்தது.

சந்திரிகா அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு, “குதிரை குதிரை! என்னை என் காவல் தெய்வம் இருக்குமிடத்திற்குக் கொண்டு செல்கிறாயா? உனக்குக் கொள்ளும் புல்லும் தருகிறேன்!” என்று கேட்டாள்.

அதைக் கேட்டதும் அந்தக் குதிரை சந்திரிகாவின் முன் குன்ரிந்து கொடுத்தது. அதன் மீது சந்திரிகா ஏறிக்கொண்டாள். உடனே குதிரை பாய்ந்தெழும்பி ஒரு பறவையைப் போலப் பறந்து சென்றது. தேவதை அருளுடையாளின் குகைக்கு சந்திரிகாவைக் கொண்டு வந்து சேர்த்தது.

தேவதை அருளுடையாளின் முன்னால் சந்திரிகா மூன்று முறை வீழ்ந்து வணங்கின்ாள். "அன்னையே! உ1களுக்குப் படைக்கப் பாலும் சோறும் கொண்டு வந்திருக்கிறேன். ஏற்றுக்கொண்டு எனக்கு ஆசி தரவேண்டும்" என்றாள்.

"வா, வா, சந்திரிகா என் அருகில் வா! நான் உனக்கு ஒரு முத்தம் கொடுக்க வேண்டும்!” என்றாள் தேவதை அருளுடையாள்.

பிறகு அவள் ஒரு தந்தச் சிப்பைக் கொடுத்துத் தன் கூந்தலை வாரும்படி கூறினாள்.

"சந்திரிகா! நீ ஏன் வந்திருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும். உன் அப்பாவும் அம்மாவும்