பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/66

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

கொல்லாமல் இருந்திருந்தால், அவர் அதன் தோலையுரித்தெடுத்துச் சந்தைக்கு விற்கக் கொண்டு போயிருக்கவும்மாட்டார். நான்கு சாக்குப் பை தங்கத்தோடு திரும்பி வந்திருக்கவும்மாட்டார். அதற்காகத் தங்களுக்கு நாங்கள் மனப்பூர்வமாக நன்றி கூறுகிறோம்! இப்பொழுது அவ்வளவு பொற்காசுகளையும் அளக்க எங்களிடம் எதுவும் இல்லை. அதற்காகத் தான் உங்களிடமிருந்து படி வாங்கிக் கொண்டு போகலாம் என்று வந்தேன்” என்றாள்.

அவள் சொல்லுவதெல்லாம் மொட்டைப் பொய் என்று சொல்லிச் சுமார் ஐந்து நிமிடம் வரை அரக்கன் அவளைத் திட்டினான். கடைசியில் ஒருவாறு தணிந்து, 'சரி, வா! நானே நேரில் வந்து பார்க்கிறேன்!” என்று சொல்லிப் புறப்பட்டான்.

அரக்கன் மலையிலிருந்து கீழே இறங்கி வரும்போது அவனுடன் கூடவே வருவதற்காக உடல் குலுங்கக் குலுங்க ஓடி வந்தாள் தோட்டக்காரன் மனைவி . தோட்டக்கார்ன் வீட்டில் அவன் தங்கநாணயக் குவியலின் மத்தியிலே உட்கார்ந்து கொண்டிருப்பதை நேரில் பார்த்த அரக்கன் ஆச்சரியத்தால் வாய்பிளந்து நின்று கொண்டிருந்தான். அவன் ஆச்சரியம் சிறிது தணிந்து பேசக்கூடிய நிலை வந்தவுடன், "இவ்வளவு பொன்னும் நீ கொண்டு போன ஒரு மாட்டுத் தோலுக்காக்வா கிடைத்தது? இது உண்மைதானா?” என்று கேட்டான்.

"உண்மைதான் பெருந்தலைப் பிரசண்டரே! இதோ பாரும் நான்கு சாக்குப் பைகள்!” என்று தலை நிமிர்ந்து பதில் கூறினான் சமயோசிதம்.

“சரி, நான் வருகிறேன்!” என்று அரக்கன் சொல்லிவிட்டு வாடகைப் பணம் கூடக் கேட்காமல் அவசரமாகத் திரும்பிச் சென்றான்.