பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/73

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

71

கூடும். அதைக் கொடுத்துவிடு" என்று கேட்டான் அரக்கன்.

"ஐயா மறுபடியும் என் மனைவியைக் கொன்ற பிறகு என்ன செய்வது?’ என்று கேட்டான் சமயோசிதம்.

"புதைத்துவிடு!" என்று சொல்லிவிட்டு அரக்கன் அந்தத் துருத்தியைப் பறித்துக் கொண்டு தன் மாளிகைக்குத் திரும்பினான். சமயோசிதமும் அவன் குடும்பத்தாரும் இடுப்பு வலிக்கச் சிரித்தார்கள்.

மாளிகைக்கு வந்த அரக்கனை அவன் மனைவி பெருவாய்ப் பேச்சி, வாசலிலேயே சந்தித்தாள். "அந்தத் தோட்டக்காரனிடம் உங்கள் ஆத்திரத்தைத் திர்த்துக் கொண்டாயா?" என்று அவள் கேட்டாள்.

"நான் ஆத்திரத்தையே மறந்து விட்டேன். ஆனால் என் அருமை அரக்கியே! இதோ பார் ஓர் அருமையான பொருளைக் கொண்டு வந்திருக்கிறேன். இது ஒரு மாயத்துருத்தி. இறந்தவர்களைத் திரும்பவும் மூச்சுவிடச் செய்யும் இந்த அதிசயத் துருத்தி!” என்று பெருமையுடன் சொன்னான் அரக்கன்.

"ஐயோ! மறுபடியும் அந்தத் தோட்டக்காரன் உன்னை ஏமாற்றி விட்டானா? இந்த உலகத்திலேயே உன்னைக் காட்டிலும் பெரிய முட்டாள் யாரும் இருக்கமாட்டார்கள் போலிருக்கிறதே!" என்று அரக்கி பெருவாய்ப் பேச்சி பெரிதாகப் பேச ஆரம்பித்தாள். அரக்கன் அவளை இடைமறித்துப் பேச முயன்றான். ஆனால், அவள் இடைவிடாமல் அவன் ஏமாந்து போனதைக் குறித்து தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தாள். அவள் பேசும்போது அரக்கன் குறுக்கே பேச முயன்றபோதெல்லாம் இப்படித்தான் தோல்வி காண்பது வழக்கம். இந்த வழக்கத்தை மாற்ற