பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

பூவை எஸ். ஆறுமுகம்



எனக்குக் கொடுத்திடு!... அந்தத் தண்டனை இந்தத் துரோகியை பாவியை மிருகத்தைக் கடைத்தேறச் செய்யட்டும்!...” என்று ஓங்காரமிட்டுக் கதறிய வண்ணம் மறுபடியும் ஊர்வசியின் பாதங்களில் சிரம் பதித்துக் கூக்குரலிட்டு அழுதான் பூமிநாதன். அவன் நினைவு சிறுகச் சிறுக மாறிக் கொண்டிருந்தது! வெஞ்சினம் மூள, எச்சில் கையுடன் எழுந்தான் அம்பலத்தரசன். அவனை முந்திக்கொண்டு, ஊர்வசியின் அன்னை பூமிநாதனின் தலை முடியை வெறி மூளப் பற்றினாள். பாழ் நெற்றியில் பழிவாங்கும் வைராக்கியம் தவம் இருந்தது. அன்னையைத் தடுத்தாள் புதல் வி. பூமிநாதனின் கன்னங்களில் அறையக் கையை ஓங்கிய அம்பலத்தரசனையும் கரம்பற்றித் தடுத்தாள் ஊர்வசி. "தெய்வம் விளையாடுதுங்க, அத்தான்!. தர்மம் விளையாடுதுங்க, அம்மா!... நீங்க ரெண்டு பேரும் எனக்குக் கண்கண்ட தெய்வங்கள்! தயவு செஞ்சு நீங்க ரெண்டு பேரும் அமைதியாயிருங்க... கையெடுத்துக் கும்பிடுறேன்!"என்று நைந்த குரலெடுத்துப் பேசிவிட்டு, தன்னை மறந்து, விம்மி வெடித்துக் கொண்டிருந்தாள் ஊர்வ சி. அவள் வடித்த விழிவெள்ளம் பூமிநாதனின் தலையில் வழிந்து கொண்டேயிருந்தது. கணங்கள், பேய்க்கணங்களாக ஊர்ந்தன. அம்பலத்தரசனும் மீனாட்சி அம்மாளும் சிலையாக நின்றனர். சுயப்பிரக்ஞை கொண்டாள் ஊர்வசி, வழிந்த கண்ணிர் வழிந்தோட, பூமிநாதனை நோக்கினாள். - பூமிநாதன் சுயப்பிரக்ஞை தப்பிக்கிடந்தான். ஊர்வசி, அவன் முன்னே குனிந்து உட்கார்ந்தாள். சரிந்து விழுந்தது மாரகச்சேலை. எடுத்துப் போட்டுக் கொண்டாள். பூமிநாதனைத் தொட்டுத் தலையைத் துக்கினாள். அப்போது அவனுடைய சட்டைப்பையிலிருந்த ஓர் அழகான தங்கத்தாலியும் ஏழெட்டு தூக்க மாத்திரைகளும் நழுவின. அவனை மீண்டும் பார்த்தாள். அவன் இன்னமும் தன்னினைவு கொள்ளக் காணோம்: "பூமிநாதன் மிஸ்டர் பூமிநாதன்..." என்று பலத்த குரலெடுத்துக் கூப்பிட்டாள். இதழ்க் கரையில் உவப்பு நீர் கரைந்தது.