பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீ சிரித்த வேளை 1膏 "ரொம்ப தாங்க்ஸ், ஸார். உங்க பாராட்டும் துண்டுதலும் தான் எனக்கு எப்போதுமே உற்சாகம் கொடுத்து வருது. நீங்க ரெண்டு வரி எழுதிட்டா, அதோட பலனே பிரமாதமாய் அமைஞ்சிடும். இந்த மட்டுக்கும் எனக்கு நிம்மதிதான்!" "நீங்க கற்பழிச்ச அந்தக்கட்டத்திலே ரொம்பவும் தத்ரூபமாய் நடிச்சிட்டிங்க. உங்க நடிப்பு ரொம்பவும் ரியலிஸ்டிக்காக இருந்துச்சு. ரெண்டு வரி என்ன, நாலு வரி உங்களைப் பத்தி எழுதியிருக்கேன். காலம்பற பேப்பரிலே படியுங்க. நீங்க இன்னும் சந்தோஷப்படுவீங்க!" "அப்படியா? ரொம்ப நன்றிங்க, அம்பலத்தரசன்!" பூமிநாதன். "நாடகத்திலே கதையம்சம் அழுத்தம் குறைஞ்சிருத்திச்சு. ஆனாலும், தொன்று தொட்டு வளர்ந்துக்கிட்டு வருகிற நாடகக் கலைக்கு உயிரும் ஊட்டமும் கொடுப்பதில் உங்க பங்கை நீங்களும் செய்திருக்கிறதுக்காக நானும் உங்களுக்கு நன்றி தெரிவிக்கத்தான் வேணும். நாடகக் கலை வளரவில்லைன்னு வழக்கமாய்க் குறை சொல்லும் ஒரு கோஷ் டிக்கு இந்த நாடகமும் கட்டாயம் ஒரு நல்ல தெளிவையும் ஒரு பயனுள்ள பலனையும் உண்டாக்குமென்கிறது என்னோட சொந்த அபிப்பிராயம்!" அம்பலத்தரசன். x அப்படியா?" மைனர் செயினை நெருடி விட்டுக் கொண்டான் பூமிநாதன். - "ஆமாம், நிச்சயமாகத்தான்!" "பிறரைக் குறை சொல்லித் தாங்கள் உயர நினைப்பவர்கள் போலிருக்கு அவர்கள்!" . - "ஆமாம்." . அப்படியானால், இவங்களையும் குற்றப்பரம்பரை லிஸ்டில் சேர்க்க வேண்டியதுதான் என்று சொல்லுங்க!" என்று ஒரு போடு போட்டான் பூமிநாதன். இதற்குப் பதில் எதுவும் சொல்லாமல், பூமிநாதனின் அபிப் பிராயத்தை ஏற்பவன் போன்று, விநயமாகச் சிரித்து வைத்தான் அம்பலத்தரசன். அவன் பூமிநாதனைத் தலை உயர்த்திப்