பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீ சிரித்த வேளை . s? கேள்வி கேட்ட புண்ணியவானே, ஒரு பதிலுக்கும் கோடி’ காட்டிவிடவே, அம்பலத்தரசன் மேற்கொண்டு விடை சொல்லச் சிரமப்படவில்லை. "இதுக்குப் பேர்?" "இருக்குங்க, ஊர்வசின்னு பேர்!" "சுந்தரியின்னு சொன்னாங்களே!" "அது நாடகத்திலே வச்ச பேர்." "பாவம், இத்தனை நல்ல பெண்ணைக் கெடுக்கவும் ஒரு பாவிக்கு மனசு வந்திச்சே?" என்று வருந்தினார் குஞ்சித பாதம். அவர் வருத்தம் அவனுக்குத் திகிலை ஊட்டியது. ஒர் அரைக் கணத்தில் அத்திகில் மறைந்தது. நாடகக்கதையிலேயே இன்னமும் அவர் நின்று கொண்டிருந்ததை அவன் அனுமானம் செய்துகொண்டான். ஆமாங்க. பாவி ஆனபடியாலேதானுங்க, அவனுக்கு அத்தனை பெரிய பாவத்தைச் செய்யத் துணிச்சல் வந்திச்சு; மனமும் வந்திருக்கு!" - பெரியவர் ஏனோ ஊர்வசியை விழுங்கி விட எண்ணினார். அப் பார்வையை அவள் தாங்க வலி விழந்தான். அப் பார்வை அவளுக்கு வலியைத் தோற்றுவித்தது: "ஐயா, பேப்பரிலே பெரிய அதிசயமெல்லாம் இருக்குதுங்களே!" என்று அவரைத் திருப்பி விட்டாள் ஊர்வசி. - கஞ்சப் பிரபுவானாலும், சிரிக்க மறக்க வில்லை வீட்டுக்காரர். பத்திரிகையைப் புரட்டினார். - - - ஐயா, வீட்டுக்கு எடுத்திட்டுப் போய்ப் பார்க்கலாமே ஆபிஸ் - விட்டு வந்ததும் நானே வந்து வtங்கிக்கிற்ேனே! கடையிலே யிருந்து, மத்தியானச் சாப்பாட்டுக்கு வரப்போ, வீட்டிலே கொண்டு வந்து பேப்பரைப் போட்டிடுங்க!" என்று அடைத்த பொறுப்பாகச் சொன்னான் அம்பலத்தரசன்! குஞ்சித பாதத்தோடு அன்றையச் செய்தித்தாளும் சென்றது. தான் சொன்ன தமாஷை எண்ணி அவள் சிரிக்க, அவள் சொன்ன நகைச்சுவையை அவன் ரசித்துச் சிரித்தான்.