பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

பூவை எஸ். ஆறுமுகம்



அவளது தளர்ந்தொடுங்கிய வதனத்தில், "உன்னைக் கெடுத்த அந்தப் பாவி யாரம்மா ? சொல்லு. இப்பவே போய் அவன் ரத்தத்தைக் குடிச்சிட்டு வந்திடுறேன்! சொல்லு மகளே!" என்று கேட்டாள். பழி வாங்கத்துடித்தாள் அவள். - "அந்தப் பாவியின் ரத்தத்தைக் குடிக்கிற கடமை என்னோடயே இருகட்டும்!....நீ ஆத்திரப்படாதேம்மா!... அந்தத் துரோகியைப்பத்தி இப்போ ஒண்ணும் சொல்லமாட்டேன் நான்!.... அவனை நானே உன் முன்னாலே கொண்டாந்து நிறுத்திடுறேன் அம்மா! என்னை நம்பும்மா!"என்று உறுதி மொழிந்தாள் அபலை ஊர்வசி, கையடித்துக் கொடுத்தாள். "அம்மா ஊர்வசி! நீ தானே என்னோட நம்பிக்கை, நாணயம் எல்லாம்! நீ இல்லைன்னா, நான் மாண்ட இடம் எப்பவோ புல் மண்டிப் போயிருக்குமே!.... சரியம்மா!... ஊம்.... இனி உன் கதி?... என்று புதிய பிரச்னை ஒன்றைக் கிளப்பிவிட்டு", மீண்டும் விம்மத் தொடங்கினாள் மீனாட்சி அம்மாள். அன்னைக்குப் பதில் சொல்ல வாயைத் திறந்தாள் புதல் வி. அப்போது, அங்கே தோன்றினான் அம்பலத்தரசன்! மீனாட்சி அம்மாளின் அருகில் வந்து நின்றான். "அம்மா. உங்க மகள் தனக்கு ஏற்பட்ட துர்ப்பாக்கியத்தை ஒரு புதுச் சக்தியோடு சுமந்துக்கிட்டு, என்னை நம்பி வந்திடுச்சு ராத்திரி. தேவதையைக் கண்டதொப்ப இருந்திச்சு எனக்கு. நடப்பைச் சொல்லி, என்கிட்டே அடைக்கலம் அடைஞ்சுது என் பேரிலே அதுக்கு இருக்கிற அந்த நம்பிக்கையையே என்னோட கடமையின்னு கருதி, அதோட இஷ்டப் பிரகாரமே அதை என் சொத்தாய் ஆக்கிக்கிடுறதாகவும் உறுதி கொடுத்தேன்!... ராத்திரி என் அறையிலேதான் படுத்திருந்திச்சு.... என் பேரிலே அது கொண்ட நம்பிக்கையைக் காத்துக்கிட்டேன்.... இப்போது என் வாக்கைக் காப்பாத்திக்கிட வேண்டிய ஒரு கடமையும் காத்திருக்குது! அதுக்கு உங்க தீர்ப்புத்தான் வேணும்! உங்களோட நல்வாக்கு எனக்குக் எங்களுக்கு கிடைச்சிட்டால், அப்புறம் எனக்கு இந்த லோகமே துச்சம் தான். உங்க மாதிரி எனக்கும் ஒரு வயசான தாய் இருக்கிறாங்க. அவங்க இந்தக் கதையைக் கேட்டு என்னை