பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

பூவை எஸ். ஆறுமுகம்



தயவு பண்ணி விளக்கம் கொடுக்கிறீங்களா? தமிழ்ப் பண்பாடு அப்படின்னு சொல்லுறீங்களே? அதுக்கு விளக்கம் தரமுடியுமா? " என்று கேள்வி தொடுத்தான் அம்பலத்தரசன். "பெண்ணுக்குக் கற்புதான் உயிர். அத்தகைய கற்பு பறிபோயிட்டால், உடனே அவள் தன் உயிரைப் போக்கிக் கிட வேண்டியதுதானப் பெண்ணுக்குரிய விதி... இதைத்தான் தமிழ்ப் பண்பாடுன்னு சொல்லுறோம். இதுவேதான், காலம் காலமாய் நம் தமிழ்நாட்டிலே மரபாகக் கடைப்பிடிக்கப்பட்டுவருது!..." என்று ஆணித்தரமாகக் குறிப்பிட்டான் கருணாநிதி. "ஆல் ரைட்... அநீதியாய்க் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு நீங்க கொடுத்த முடிவு இது இதைத்தான் நீங்க தமிழ்பண்பாடுன்னு சொல் lங்க! ஆனா, அநியாயமாகக் கற்பழிக்கப்பட்ட பெண் கடலிலே விழுந்து செத்திட்டால் மட்டும், அவளுக்கு உண்டான அந்த அவப்பெயரும் அவளோடேயே செத்திடும், உடனே நம் தமிழ்ப் பண்பாடு காப்பாற்றப்பட்டுவிடும்னு நீங்க நம்பு lங்களா?..." என்று அடுத்த வினாவைச் சொடுக்கினான் அம்பலத்தரசன். மனயாழ் சோகச் சுருதி கூட்டியது. கருணாநிதி இமைப்பொழுது இமைக்காமல் இருந்தான்; லேசாக அரும்பியிருந்தது வேர்வை. "அந்த அவப் பெயர் எப்படி மறைய முடியும்?" என்று அம்பலத்தரசனையே கேள்வி கேட்டான் அவன். "கற்புநிலை தவறிய” அந்நிலைக்குப் பலாத்காரமாக ஆளாக்கப்பட்ட அந்த பெண், செத்தால் கூட மறைய முடியாத அவப் பெயரோடே வாழ்ந்தால் மட்டும், என்ன குடி முழுகிப் போயிடும்? சொல்லுங்க கருணாநிதி, சொல்லுங்க!..." என்று உணர்வுச் சுழிப்புடன் பேசினான் அம்பலத்தரசன். "அவளை உலகம் தூற்றாதா?" "உலகம் யாரைத்தான், எப்போதுதான் துற்றவில்லை?" "அப்படின்னா, கெட்ட பெண்களுக்கு இந்த லோகத்திலே இடம் உண்டு ன்னு வாதாடு நீங்களா, அம்பலத்தரசன்?"