பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 2 மங்கையர்க்கரசிக்கு நல்லமுத வாக்குக் கொடுத்தாள் லேடி டாக்டர். - அம்பலத்தரசனுக்கு அவ்வாக்கு அமுதாகி இனித்தது. ஆனால், ஏன் அவள் இப்படி அழுகிறாள்? "அழாதேம்மா. நீ பிழைச்சிடுவாய்!” என்று ஆறுதல் படுத்தினாள் டாக்டரம்மாள். "அம்மா, நான் பிழைச்சிடுவேனோ என்கிறத்துக்காகத் தான் அழுகிறேன். அழுகிப் போன உயிர் இது! இது சீக்கிரம் போனால்தான் தேவலாம். கண்கெட்ட பின்னாலே சூரிய நமஸ்காரம் செய்யமுடியுங்களா, அம்மா?" "அம்மா, வாழ்க்கைதான் நம்ம கையிலே இருக்கிறதே தவிர, ஜீவன் நம் கையிலே இல்லை. அது ஆண்டவனுக்குச் சொத்தம். உன் நிலையும் சீக்கும் எனக்குப் புரிஞ்சிட்டுது!... நீ பிழைச்சு எழுந்திடுவாய். புதிசாய்ப் பிறந்ததாட்டம் நினைச்சுக்கிட்டு, இனிமே நல்லதனமாய் வாழ்ந்திடு, போதும். கடந்ததையெல்லாம் கெட்டகனவாகவே நினைச்சிடு, அம்பலத்தரசன் உனக்கு ஆதரவு தருவார். அவரை நீ நம்பலாம்!" என்றாள் லேடி டாக்டர் மரகதம் மூர்த்தி. லேடி டாக்டரின் எம்.பி.பி.எஸ். படிப்பு, மங்கையர்க்கரசிக்குப் புதுவாழ்வும் புது உயிரும் நல்கிவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது அம்பலத்தரசனுக்கு. சிகிச்சைக்குரிய கட்டணத் தொகையை டாக்டரம்மாளிடம் கொடுத்துவிட்டு, மங்கையர்க்கரசியிடம் சென்றான். அவளுக்கு ஆறுதல் சொன்னான்: "தவறுகளை உணர்கிறதுதான், வாழ்க்கையிலே கிடைக்கக்கூடிய மகத்தான ஆறுதலாகும். இந்த வாழ்க்கையிலே, உனக்கும் ஒரு பெருமையுண்டு. மிச்சமிருக்கிற வாழ்க்கையை நீ நல்லவிதமாய்