8. திண்ணுதல் = திணிதல்; திண்மையுடையதாதல் (பாட்டு 16:6)
தண்ணினுந் தண்ணுக; மண்ணினுந் திண்ணுக” (பாட்டு 16:6)
9. கோணூல் = (கோள்நூல்) ; கோள்பற்றிய இயல் (பாட்டு 16:உரை)
10. திண்பாடு = திணிவுறுகை; செறிவுறுதல்
“மண்போலும் திண்பாடும் “ (பாட்டு 16:உரை)
11. விழைபாடு = விருப்பப்பேறு; விருப்பம் (பாட்டு 24:உரை)
12. கள்ளிக்காய் = மிளகாய் (பாட்டு 29:2)
13. ஈனாக்கன்று: செய்கன்று. ஈன்றகன்று இறந்த விடத்து வைக்கோல் முதலிய செய்பொருள்களைக் கொண்டு செய்த பொய்க்கன்று. (பாட்டு 30:2)
14. வினைந்து = வினையைச் செய்து
“வாழில் வினைந்து“ (பாட்டு 33:2)
காட்சியழகும் ஆட்சியழகும்:சில இடங்கள்
(உரை: ஊன்றுகோல் இல்லாத குருடன் செல்வழியறியாமல் தடுமாறித் தவித்தல் போல.)
(ஆட்டுக்குட்டிகள் பாலருந்தும் காட்சி)
உரை: இளமையான முன்னங்கால்களை நிலத்தே படிதலுற ஊன்றி, பின் கால்களால் எவ்வுதல் செய்து, தம் புனிற்றிளந் தலைகளான் செய்கின்ற முட்டுதலுக்கு)
3. “............................ முகில்திரி விசும்பிற்
கயிறாடு தொம்பர்க் கைக்கழி யன்ன
“உரை: உள்ளே கொண்ட பகை நாளுக்குநாள் ஊறிப் புளிப்பேறும் தன்மைகொண்ட நெஞ்சினோர்.”
5. “கவண் முகத் துருவிய சிறுகல் போல
விசைப்பே அளவிடைப் பொழுதே” (பா:31:வரி:2-3)
(உரை கல்லெறி கருவியின் முனையினின்று உருவிப்போகும் சிறு கல்லைப் போலும் வாழ்க்கையில் விசைப்பு-ஓர் அளவுபட்ட சிறுபொழுதே...)