இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
325
உன்னுவது எவையும் தம்மிய என்னா- தம் மனத்துத் தோன்றும் கருத்துகள் அனைத்தும் தாமே கருதியன என்று கொள்ளற்க,
உன்னுவது கருதுவது கருதப்படும் கருத்துகள். தம்மிய-தம்முடையன. தாமே கருதியன என்னா-என்று கொள்ளற்க
தமக்கும் எம் இயலோர்க்கும்-நினைம் தமக்கும் மற்றும் எத்திறத்தார்க்கும் நன்மை விளையுமாறு நினைக.
எம் இயலார்க்கும் எவ் இயலார்க்கும். அம்மை-அவ்வை, செம்மை-செவ்வை முதலானவற்றுள் மகரம் வகரமிகத் திரிந்தாங்கு ஈண்டு வகரம் மகரமாகத் திரிந்தெனக் கொள்க.
இப்பாடல் பொதுவியல் என்னும் புறத்தினையும் பொருண் மொழிக்காஞ்சி என்னுந் துறையுமாம்.