பக்கம்:நூறாசிரியம்.pdf/380

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

354

நூறாசிரியம்


சுமந்ததும் ஈன்றதுமாகிய இருநிலையையும் உள்ளடக்கி மெய்அற வருந்தி என்றாள். அறமுழுவதும்.

பையல் விறலின் உய நோய் மறந்து -ஆண்மகவின் வீறிட்ட அழுகுரல் கேட்டு மகப்பேற்றுத் துன்பத்தை மறந்து

ஆண்மகவு என்பது அந்நொடியில் அறிய வாய்ப்பில்லையாயினும் வீறிட்ட குரலாலேயே உணர்ந்தாள் போலும் மகவு ஆதலின் பையன் என்னாது பையல் என்றாள். பையலைப் பயல் என்பது சிறுமைப்படுத்தப்பட்ட இற்றை வழக்கு

வீறல்- வீறிட்டழுதல்,

மகப்பேற்றுத் துன்பம் உயநோய் எனப்பட்டது.

ஆகக் கனப்பில் அனைத்து அமிழ்து ஊட்டி -உடலின் வெதுவெதுப்பில் அனைத்துக் கொண்டு பாலமிழ்தைப் பருகுவித்து.

அமிழ்தாவது தாய்ப்பால். இதன் விளக்கத்தை ஆசிரியரின் திருக்குறள் மெய்ப்பொருளுரையில் காண்க!

ஆகம் உடம்பு

ஏகுநாள் எண்ணி- நாள், மாதம், ஆண்டு என அகவைக் கணக்கீட்டால் மகனின் வளர்ச்சியை மகிழ்வுற எண்ணி.

கழிந்த காலம் வளர்ந்த நிலையைக் குறிப்பதாயிற்று.

ஏகுதல் கடத்தல்.

இளவோன் ஆக்கி -கட்டிளம்பருவ இளைஞனாக வளர்த்து ஆளாக்கி பையலை இளைஞனாக வளர்த்த நிலையைச் சுட்டினாள். போகவிட் புறத்து வெளியிலே அனுப்பி வைத்த அவ்விடத்தில் இளைஞனாகுங்காறும் தன். கண்காணிப்பிலேயே வளர்த்தவள் பருவமெய்திய நிலையில் கண்காணிக்கவியலாத வெளியிடத்துக்கு அனுப்பி வைத்தாள். போகவிட்ட புறத்து என்பதைப் புறத்துப் போகவிட்ட எனக் கூட்டுக.

எம்புகழ்கெட எம் புகழ் கெடுமாறு

தன்கணவனையும் மற்றும் இளைஞனின் பாட்டன் பாட்டியரையும் உள்ளடக்கி எம் என்றாள்.

ஏகாச் சேர்க்கை இணைந்தோன் ஆகி - சேரக்கூடாத சேர்க்கையொடு பொருந்தியவனாகி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/380&oldid=1209397" இலிருந்து மீள்விக்கப்பட்டது