பக்கம்:நூறாசிரியம்.pdf/403

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

377


90 உளக்கனல்


மருளாய் வாழி நெஞ்சே! அருளற
இருள்தோய் வழக்கின் இனநலந் தீய்க்கும்
நெறியலர் செல்வக் குறியெதிர் நினைந்து
பொறியின் மாக்கள் புன்செயல் விஞ்சும்
பெற்றிய ராகிப் பெரியோர்க் குழத்தல்
முற்றிய கொள்கை முழுநலந் தேக்கும்
நீரவர் உளக்கனல் நில்லா(து)
ஊரவர் திரளும் நாளுமொன் றுண்டே!

(ஞா.தேவநேயனார் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தினின்றும் விலக்கப்பெற்ற காலை நெஞ்சு தேர்வுற எழுதி விடுத்த பாவோலை)

பொழிப்பு:

பெரும, வாழி! நெஞ்சம் மயங்கற்க அருளுணர்வின்றி ஆணவம் பொருந்திய வழக்கத்தினை யொட்டி, இனநலத்தை அழிப்பவரான கீழ்மக்கள் செல்வமாகிய கைமாறு கருதி, மனப்பொறியில்லாத விலங்குகளின் இழிசெயலினும் மேம்பட்ட தீவினை புரியுந் தன்மையுடைவராகி, அரிய பணி செய்யும் பெரியோர்க்குத் துன்பம் விளைத்தலால், திண்ணிய கொள்கைத் திறத்தினால் மக்களுக்கு முழுமையும் நலஞ்சேர்க்கும் தன்மையினர்ர் உள்ளத்தின் கண் கனலுகின்ற தீ அடங்காது; ஆதலின் நாட்டு மக்களெல்லாம் திரண்டெழும் நாளும் ஒன்று உண்டு!

விரிப்பு:

இப்பாடல் புறப்பொருள் சார்ந்தது.

பாவலரேறு, தம் ஆசிரியப் பெருந்தகையான மொழி ஞாயிறு பாவாணர் அவர்கள் அருந்தமிழ்ப் பெரும்பணியாற்றச் சென்ற அண்ணாமலை பல்கலைக் கழகத்தினின்றும் பதவி விலக்கம் செய்யப் பெற்ற காலை, அதுபற்றி அவர் மனங் கலங்காதிருக்க வென்று தெளிவுறுத்தி எழுதி விடுத்தது இப்பாட்டு

அருளுணர்வின்றியும் ஆணவத்தாலும், கைம்மாறு கருதி இனநலம் அழிக்கும் கடையர், விலங்கின் செயலையும் விஞ்சுமாறு பெரியோர்ப் பிழைத்துத் துன்பமிழைத்தலால், கொள்கை உரவோர் நெஞ்சத்துப் பற்றிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/403&oldid=1211213" இலிருந்து மீள்விக்கப்பட்டது