பக்கம்:நூறாசிரியம்.pdf/406

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

380

நூறாசிரியம்


91உழையாதுண்மர்


செடிகொடி மரனுஞ் சிப்பியுஞ் சங்குத்
துடியல் எறும்புத் தும்பியும் புள்ளும்
விலங்கு மென்றிவை வினைசெய் துயிர்த்தலோடு
இலங்கு மாந்தர்க் கியற்றலு மாக
இருகை யிருகால் இருகண் ணிருசெவி 5
ஒருவாய் ஒருவயி றுற்றவ ரெல்லாந்
தாந்தாந் தேடலுந் தாந்தமைப் புரத்தலும்
ஏந்துநீ ருலகத் தியற்கை யாதலின்
உழையா துண்மர் உருக்குறைந் திரிந்து
பிழைப்போர் தம்மின் பிழைப்பார் வாரே!10

பொழிப்பு:

செடியே கொடியே மரமே என்னும் நிலைத்திணைகளும், சிப்பியும் சங்கும் என நீந்துவனவாகவும், துடியலும் எறும்பும் என ஊர்வனவாகவும், தும்பியும் புள்ளும் எனப் பறப்பனவாகவும் விலங்கு என நடப்பனவாகவும் உள்ள இயங்கு திணைகளும் ஆகிய இருவகை உயிரிகளும் செயற்பட்டுத் தரம் உயிர்வாழ்தலொடும் விளங்குகின்ற மக்களுக்கு உதவுகின்றனவாகவும் இருப்ப, இருகண்ணும் இருசெவியும் ஒருவாயும் ஒரு வயிறும் கொண்டுள்ள மக்களெல்லாம் தாமே தமக்குத் தேவையானவற்றை முயன்று தேடலும் தம்மைக் காத்துக் கொள்ளுதலும் நீரால் ஏந்தப் பெற்றிருக்கும் இவ்வுலகத்து இயற்கையாய் இருத்தலின் உழைக்காமேலே உண்டு வாழ்பவர்கள் உடல் கூனிக் குறுகி இரந்து வாழ்வோரைவிட இழிவான பிழைப்பில் நிறைவுறு வோராவர்.

விரிப்பு:

இப்பாடல் புறப்பொருள் சார்ந்தது.

நிலைத்தினையும், இயங்குதினையுள் நீந்துவனவும், ஊர்வனவும் பறப்பனவும், நடப்பனவும் ஆகிய பல்வகை அஃறிணை உயிரிகளும் தாந்தாம் வினைப்பட்டு வாழ்தலோடு, மாந்தப் பிறப்பினருக்கும் துணையாகி உதவுகின்றனவாக, மாத்தரும் முயற்சியாற் பொருள்தேடியும் தற்காத்துக் கொண்டும் வாழ்கின்றனர். இவ்வாறிருக்கும் உலக இயற்கைக்கு மாறாக மாந்தராய்ப் பிறந்தும்.உழைக்காமலே உண்டு வாழ்பவர்கள், மானமின்றிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/406&oldid=1211224" இலிருந்து மீள்விக்கப்பட்டது