பக்கம்:நூறாசிரியம்.pdf/419

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

393


95 பொற்புறு கொள்கை

நல்லியல் மாந்தர் நலங்கவர்ந் துண்ணும்
புல்லியர்ச் செகுக்கும் பூட்கை யோனே
உணர்வு நுண்ணிய உளமும் உளத்துப்
புணர்வு மன்னிய உரையும் உரைத்த
நிலைவினை பண்ணு மதுகையு நிவந்த 5
புலரா வாழ்வொடு பொருந்தினர் வயினே
தற்குழ் பறிந்து தாமுயர் வுறுதலும்
பொற்புறு கொள்கைப் பூண்டுளி தளர்தலும்
யாண்டுங் காண்கில மாகவின்
வேண்டுங் கொன்மதி நுமக்கெழு விழைவே! 10


பொழிப்பு:

நல்ல இயல்பினையுடைய மாந்தரது செல்வத்தை வலிந்து கைப்பற்றி உண்டு வாழும் கயவர்களை அழிக்கும் கொள்கையாளனே உணர்வு நுணுகி யிருக்கும் மனமும், மனத்தொடு ஒன்றிப் பொருந்திய வாய்மொழியும், சொல்லிய சொல்லைச் செயற்படுத்தும் ஆற்றலும் உயர்ந்த வாடுதலில்லாத வாழ்வின் கண் பொருந்தியவரிடத்து, சூழ்நிலையை அறிந்து தாம் தம்மை உயர்த்திக் கொள்ளுதலும், உயர்ந்த கொள்கைப் பற்றினின்றும் சிறிதேனும் தளர்ச்சியுறுதலும் எங்கும் காணேம்; ஆதலின் துங்கட்கு விருப்பம் தோன்றுதல் வேண்டுங்கொல்!

விரிப்பு:

இப்பாடல் புறப்பொருள் சார்ந்தது.

நன்மக்களின் செல்வத்தைச் சுரண்டியும் கொள்ளையடித்தும் உண்டு வாழும் கயவர்களை அழிப்பதையே கொள்கையாகக் கொண்டியங்கும் படையின் தலைவன் தன் படையைச் சார்ந்த வீரன் ஒருவனை நோக்கிக் கூறுவதாக அமைந்தது இப்பாட்டு.

நல்இயல் மாந்தர் நலம் கவர்ந்து உண்ணும் நல்ல இயல்புகளையுடைய மக்களது செல்வத்தை வலிந்து கைப்பற்றி உண்டுவாழும் கயவர்களை.

நல்லியல் மாந்தராவார் முறையான வழிகளில் முயற்சி மேற்கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/419&oldid=1211267" இலிருந்து மீள்விக்கப்பட்டது