இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
395
தற்குழ்பு அறிந்து தாம் உயர்வு உறுதலும் - சூழ்நிலையின் திறமும் வாய்ப்புகளும் அறிந்து அதைப் பயன்படுத்திக் கொண்டு தம்மளவில் தாம் மட்டும் முன்னேறுதலும்.
பொற்புஉறு கொள்கைப் பூண்துளி தளர்தலும் - சிறந்த கொள்கைப் பற்றினின்றும் சிறிதேனும் தளர்ச்சியுறுதலும்
பொற்பு சிறப்பு. பூண் பற்று. துளி- சிறிதளவு.
யாண்டுங் காண்கிலம் - எங்கும் யாம் காணேம்.
காண்கு இல்அம் காண்கிலேம்; காணேம்.
நுமக்கு விழைவு எழுதல் வேண்டும் கொல் - நுங்கட் கெனத் தனியே விருப்பம் வேண்டுங்கொல்!
மேல் பூட்கையோனே என விளித்தவர் ஈண்டு நுங்கட்கு என்றது அவன் போல்வாரையும் உள்ளடக்கி என்க.
மதி-அசை,
இப்பாடல் பாடாண்டிணை யென்னும் புறத்திணையும் நெடுமொழி வஞ்சி என்னுந் துறையுமாம்.