பக்கம்:நூறாசிரியம்.pdf/449

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

423

போதா யலராய் புடையவிழ்ந்து மலராய
காதலு முண்டு சாதலுங் கண்டது
கூதளங் கண்ணியின் விழிகள் 5
காதள வோடிக் கவ்விய போழ்தே!

11

தேமாங் கொழுந்தைத் துவர்வாய்க் கிளிகள்
ஏமத் தருந்திக் காமுற் றிணையும்
புறவூர்த் தோப்பின் புல்பொதி தொப்பை
மறக்குங் கொல்லோ தோழி
இறந்துநகர் நண்ணிக் கலைபயில் வோற்கே!

12

தொக்கின் தொகாது மிக்கின் மிகாது
நெக்குநெக் குருகு மையன் கேண்மை
எக்கால் தாழ்ப்பினு மிகவாக்
கொக்குப் போல்வது யானவற் குறியே!

13

நெகிழ்ந்த கைதொழச் செருத்தலை தாழக்
கனிந்த கிளவியோ டுள்ளங் கசிய
நினையார்க்கு மருளும் நெஞ்சோன்
எனையார்க்கு மிரங்குக இணைகவன் றாளே!

14

நெஞ்சுநல மழுகிய நஞ்சினார் தோற்றம்
பஞ்சுப் பொதியாப் பருமைத் தாயினும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/449&oldid=1234694" இலிருந்து மீள்விக்கப்பட்டது