கொண்டிருந்தால் போதாது. இந்த நாட்டு மக்களின் வாழ்க் கையைச் சான்ருக எடுத்துச் சொல்லவேண்டும். அந்த அள வுக்கு வாழ்க்கை உயர வேண்டும். அறவுரைகள்-உபதேசங் கள் மட்டுமே போதும் என்று எண்ணிவிடக் கூடாது, அவை கள் ஓர் அளவுக்கு வேண்டும். அவற்றிற்கு அப்பால் குற்றங் களுக்குக் காரணமான குறைகள் இல்லாத வகையில் வாழ்க்கை நிலையை உயர்த்தி அமைக்க வேண்டும். -மண்ணின் மதிப்பு 58. வாழ வல்லவர்கள் காலம் செல்லச் செல்ல வாழ்க்கை படிப்படியே மாறி வருகிறது. வாழ்க்கையை ஒட்டிய கருத்துக்களும் மெல்ல மெல்ல மாறி வருகின்றன. உண்பன உடுப்பன முதலான புறவாழ்க்கைப் பகுதிகளில் மட்டும் அல்லாமல், மனிதன் எண்ணும் எண்ணங்கள், உணரும் உணர்வுகள் ஆகிய அக வாழ்க்கைப் பகுதிகளிலும் மாறுதல்கள் நிகழ்ந்து வரு கின்றன. அத்தகைய மாறுதல்களை உணர்ந்து அவற்றிற்கு ஏற்ப வாழ்க்கையை இயைத்து நடத்துகின்றவர்கள் வாழ வல்லவர்கள் ஆவர். -உலகப் பேரேடு 59. வீர வழிபாடு "உயர்ந்த ஒருவரை மதித்து நம்பிக்கை கொண்டு அவரை வழிபட்டால் அவர் பெற்ற உயர்வை எளிதில் பெற முடியும். அவரிடம் குறை சில இருப்பினும், வழிபடுவோர் அந்தக் குறையும் நீங்கி உயர்வு பெற முடியும். இதுவே சமயத்துறை யில் குருவழிபாடு எனப்படுவது. குரு வழிபாடு என்பது குரு வின் உடம்பையோ படத்தையோ வழிபடுவது அன்று: குரு வின் கொள்கையை வழிபடுவதே உண்மையான குருவழிபாடு ஆகும். உடம்பையும் படத்தையும் வழிபடுவோர் இழுக்க லுறுவர்; இடர்ப்படுவர். கொள்கையை வழிபடுவோர் பயன் பெறுவர்; உயர்வு பெறுவர். சமயத்துறையில் ஒரு வழிபா 120
பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/133
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை