பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக உள்ள இதுவே அரசியல் துறையிலும் மற்றத் துறை யிலும் வீரவழிபாடாக உள்ளது. வீரவழிபாட்டில் கொள் கையை மட்டும் வழிபடும் உண்மை இருப்பின் உயர்வு பெறு வது உறுதி." -கண்ணகி 80. வையகத்துள் வாழ்வாங்குவாழ "பழமைக்கும் புதுமைக்கும் போர்; கடமைக்கும் உரிமைக்கும் முரண்பாடு; கற்புக்கும் காதலுக்கும் மாறுபாடு: கொள்கைக்கும் நடக்கைக்கும் வேறுபாடு; குடும்பத்திற்கும் உலகிற்கும்போராட்டம். இவ்வாறு ஒவ்வொரு துறையிலும் பொதுவாக வாழ்க்கை தாக்குண்டு நலிவுறுகின்றது. சிறப் பாகப் பெண்ணுள்ளம் சிதைவுறுகின்றது. அது எங்கே எவ் வாறு என ஒவ்வொரு துறையிலும் ஆராய்ந்து தெளியாமை யும், தெளிந்தவரின் நெறியை நம்பாமையுமே காரணம் எனலாம். நெறியில் தெளிவும் நம்பிக்கையும் ஏற்பட்டால் வாழ்வைக் காத்துக் கொள்ள முடியும். 'வையத்துள் வாழ் வாங்கு வாழ முடியும்." -தங்கைக்கு 121