பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/48

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

நெஞ்சக்கனல்


யூட்டி விற்கும் அந்தத் தொழில்திறனை – அதே அளவு தொழில் திறனுள்ள மற்றொரு வியாபாரி என்ற முறையில் கமலக்கண்ணன் இப்போது மனத்திற்குள்வியந்தார். பத்திரிகையை எடுத்துப்போய்த் தான் பேசியிருந்த செய்தியும் புகைப்படமும் அடங்கிய பக்கத்தை மனைவியிடம் காண்பித்தார். அதைப் பார்த்துவிட்டு ஒரு தினுசாகச் சிரித்துக் கொண்டே, ‘அடேயப்பா! பெருமை பிடிபடவில்லை’– என்றாள் அவருடைய மனைவி இதற்குள் அவருடைய வியாபார நண்பர்கள் சிலரிடமிருந்து, ‘பத்திரிகையில் அவர்பேசிய செய்தியும், படமும் வெளிவந்ததுபற்றி’ போனிலேயே அன்பான விசாரணைகளும் தொடர்ந்து வரத்தொடங்கி விட்டன. அப்படி விசாரணைகளையும் பாராட்டுக்களையும், கேட்கக் கேட்க இந்தச் சமூகத்துக்கு எல்லாத் துறையிலுமே வேண்டிய அறிவுரைகளையும், உபதேசங்களையும், அளிக்கிற தகுதி. முழுவதும் தனக்கு வந்துவிட்டதுபோல் ஓர் பெருமிதஉணர்வு கமலக்கண்ணனுக்கு ஏற்படத்தொடங்கி விட்டது. அந்தப்பெருமை குளிருக்கு இதமாக நெருப்புக் காய்வது போன்ற சுகத்தை அளிப்பதாக இருந்தது.

வழக்கத்துக்குவிரோதமாக இருந்தாற்போலிருந்து அவருடைய உதடுகள் ஏதோ ஒரு தெரிந்த பாடலைச் சீட்டியடிக்கத் தொடங்கின. சோப்புப் டவலுமாகப் பாத்ரூமிற்குள் நுழையும் விடலை வயதுக் கல்லூரி மாணவனைப் போல் உற்சாகமாக ஏதோ பாடவேண்டும் என்று தோன்றியது. அவருக்கு முதலாளியின் மனநிலையைக் கணிப்பதில் வேலைக்காரர்களை மிஞ்சிய மனோதத்துவ நிபுணர்கள் உலகில்.இதுவரை ஏற்பட்டுவிடவில்லை என்று தோன்றுகிறது. சமையற்காரன் அவருக்குக் காலை காப்பி கொண்டுவந்து கொடுக்கும்போதுகாபியை டைனிங்டேபிளில் வைத்துவிட்டுத் தலையைச் சொரிந்து கொண்டே ஏதோ செலவுக்கு ஐம்பது ரூபாய் பணம் வேண்டுமென்று விநயமாகக்கேட்டான்.

‘ஓ! பேஷாக...வாங்கிக்கொள்! நான் சொன்னேனென்று ‘அம்மாவிடம்’ சொல்லு தருவாள்’ என்று அதற்கு இணங்கினார் கமலக்கண்ணன், இங்கே அவர் அம்மா என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/48&oldid=1047324" இலிருந்து மீள்விக்கப்பட்டது