பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவியொளி வீசிய தமிழ் ஒளி 167

தோட்டத்து காவல் மரத்தின் மீதேறி அமர்ந்துகொண்டு காலைக் கதிரழகின் கற்பனையினைக் கவிதையில் வடிக்கத் தொடங்கி விடுவார். இரவு மீண்ட நேரம் விழிதது எழுத்துப் பணியில் ஈடுபடுவார். இக்கவிதையுள்ளம் பின்ளிைல் சிறந்து வளர்ந்து ஒளிவிட்டன. பிற்பட்ட வகுப்பில் பிறந்த கவிஞர்க்கு இயல்பாகவே தாழ்த்தப் பட்ட - ஒடுக்கப்பட்ட மக்கள்பால் ஆழ்ந்த பரிவுணர்ச்சி நிரம்பியிருந்தது. தொழிலாளர் நல உரிமைக்கு இவர் கவிதைகள் குரல்கொடுத்தன. முன்னணி’, ‘ஜனயுகம்’ என்ற பத்திரிகைகளில் இவர் எழுத்துவண்ணம் மிளிர்ந்தது. நான்காண்டுகளுக்குப் பின்னர் இவர்தம் அரசியல் ஈடு பாட்டினை கிறுத்திக் கொண்டு தமிழ் இலக்கிய ஆராய்ச்சி யில் ஈடுபட்டார். கம்பனிடத்தில் தனித்த ஈடுபாடு கொண்ட கவிஞர் 1955 ஆம் ஆண்டில் விதியோ? வீனேயோ?” என்னும் இசை நாடகத்தினைப் புதிய பாங்கில் எழுதினர். 1957-58 ஆம் ஆண்டுகளில் ‘மாதவி காவியம்’, ‘கண்ணப்பன் கிளிகள்’, ‘புத்தர் காவியம்’, என்னும் மூன்று கவிதை இலக்கியங்களைப் படைத்தார். இதில் ‘புத்தர் காவியம் மட்டும் முற்றுப் பெருமல் கின்று விட்டது. இது பின்னர், கம்பனுக்கு வாய்த்த சடையப்ப வள்ளல் போல் கவிஞர் தமிழ் ஒளிக்கு வாய்த்த திரு செ. து. சஞ்சீவி அவர்கள் முயற்சியால் வெளியான தமிழ் ஒளியின் கவிதைகள்’ என்னும் தொகுப்பில் புத்தர் பிறந்தார்’ என்னும் முதற் கவிதையாக கிற்கின்றது. இதன் பின்னர் இலக்கிய ஆராய்ச்சிக் கண்கொண்டு வெளியிடப்பெற். ம ‘சிலப்பதிகாரம் நாடகமா, காவியமா?’, ‘திருக்குறளும் கடவுளும்’, ‘தமிழர் சமுதாயம் முதலிய உரைநடை நூல்கள் 1959-60ஆம் ஆண்டுகளில் வெளிவந்தன

1962ஆம் ஆண்டிற்குப் பின்னர்க் கவிஞரின் வாழ்வில் கொடிய என்புருக்கி நோய் பற்றியது. அஃது உடம்பையும்