பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 நெஞ்சின் நினைவுகள்

உள்ளத்தையும் விடாது உலுக்கியெடுத்தது. 29-3-1965ல் கவிஞர் வாழ்வு முடிந்தது.

வாழ்க்கது நாற்பதே ஆண்டுகள் எனினும் கவிஞர் வற்றாத கவிதைச் செல்வத்தைத் தமிழ்ச் சமுதாயத்துக்கு வாரி வழங்கிவிட்டுச் சென்றுள்ளார். தமிழர்தம் தவக் குறைவே கவிஞர் நீண்ட ஆண்டுகள் வாழக் கொடுத்து வைக்காதது என்பது அவர் விட்டுச் சென்ற கவிதைகளேப் படித்துப் பார்க்கும்பொழுது புலகிைன்றது.

இனி, அவர் படைத்த கவிதைச் சோலையில் உலா

வருவோம்.

கவிஞர் சந்த இன்பம் தழைக்கப் பாடுபவர் என்பது அவர் புனேந்த பாடல்கள் பலவற்றின் வழி விளங்கு கின்றது.

“ஞாயிறு வணக்கம்’ எனுந்தலைப்பில் அமைந்துளள கவிதையில்,

கோலமாய் வளைந்தகடல் மேலே - ஒளி கொண்டுவரு கின்ற கதிர் வேலே!

தோள்மிசை அமர்ந்ததமிழ் போலே - மலைத் தோள்மிசை துலங்கியசெங் கோலே !

பாய்ந்திருட் கடிந்தவெற்றி வேலே - உன் பார்வையில் வடியும்ஞானப் பாலே ! என்ற அடிகளில் கொஞ்சிடும் சந்த வன்மை செவியினை நிறைவித்துச் சிங்தையினை மகிழ்விக்கக் காணலாம்.

இயற்கையில் ஈடுபாடு மிகுந்த கவிஞர் இயற்கையை வருணிக்குங்திறம் நம் நெஞ்சை அள்ளுகின்றது. புதுவை தென்னே மரங்கள் கிறைந்த நகரம். தென்னம் பந்தல்"