176 நெஞ்சின் கினேவுகள்
‘யாத்திரை’ என்ற கவிதை கவிஞன் இதயத்தையும் அதில் எழும் எண்ணத்தையும் இயம்புவதாகும்.
வெகுதூரம் நான் நடந்தேன் வெள்ளி முளைக்கவில்லை! வெகுது ரம் நான் நடந்தேன்
வீதி வெளுக்கவில்லை! போகும்வழி நீள மென்று
புத் தி உணர்ந்தாலும் போகும்வழி யெனது
போக்குக் கிசைந்தவழி! என்று குறிப்பிட்டு,
உழைக்காமல் யாது.பயன்?
ஓய்ந்தார்க்கு வெற்றியுண்டோ? அழைக்கின் ருள் கொல்லிமலை
ஆரணங்கு; செல்லுகின்றேன்! என்று கவிதையை முடிக்கின் ருர் கவிஞர்.
“அஞ்சாமல் வாழ்க்கைக் கடலில் ந்ேதினர்; ஓயாமல் உழைத்தார்; கவிதை யணங்கின் இறுதி யழைப்பையும் ஏற்றுச் சென்றுவிட்டார்’ என்று தமிழ்ச் சான்றாேர் டாக்டர் மு. வ. அவர்கள் குறிப்பிட்டுள்ளது போன்று கவிஞர் வாழ்வு முடிந்தது. ஆயினும் கவிஞரே தம் கவிதையில்,
வஞ்சகக் காலன் வருவதும் போவதும்
வாழ்க்கை நியதியடா. - எனில் செஞ்சொற் கவிதைகள் காலனை வென்று
சிரிப்ப தியற்கையடா !
என்று குறிப்பிட்டிருப்பது போன்று கவிஞர் தமிழ் ஒளி தம் இறவாத கவிதைகளால் நம்மிடை என்றும் வாழ்வார்.