பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-48 நெஞ்சின் நினைவுகள்

ஈன்பருந்து உயவும் வான்பொரு நெடுஞ்சினைப் பொரியரை வேம்பின் புள்ளி நீழற் கட்டளை யன்ன வட்டரங் கிழைத்துக் கல்லாச் சிருஅர் நெல்லி வட்டாடும் வில்லே ருழவர் வெம்முனைச் சீறுார்ச் சுரன்முதல் வந்த உரன்மாய் மாலை உள்ளினென் அல்லனே யானே உள்ளிய வினைமுடித் தன்ன இனியோள் மனைமாண் சுடரொடு படர்பொழு தெனவே.

-கற்றிகண; 3.

தலைமகன் பொருள் தேடிவர கினேக்கின்றான். அவன்

கினைப்பை அறிந்த தோழி தன்தலை வியின் துயரை எண்ணி

அவன் செலவினைத் தடுக்கப் பழைய நிகழ்ச்சி ஒன்றை கினைவுபடுத்துகின்றாள்:

நினைத்தலும் நினைதிரோ ஐய அன்றுநாம் பணத்தாள் ஒமைப் படுசினை பயந்த பொருந்தாப் புகர்நிழல் இருந்தன மாக நடுக்கம் செய்யாது நண்ணுவழித் தோன்றி ஒடித்துமிசைக் கொண்ட ஓங்குமருப்பு யானை பொறிபடு தடக்கை சுருக்கிப் பறித்தோர் ஆறிடை யிட்ட அளவைக்கு வேறுணர்ந்து என்றுழ் விடரகம் சிலம்பப் புன்தலை மடப்பிடி புலம்பிய குரலே.

-கற்றிணை: 318

அவனிடம் அவள் கொண்ட அன்பையும் அவன் பிரியின் அவள் கலங்குகின்ற கலக்கத்தையும் காட்ட வருபவள் பெண்யானை ஆண்யானையிடம் கொண்ட அன்பினைக் கூறி விளக்குகின்ற வகையில் அன்றாெரு நாள் காம் மூவரும்