பழந்தமிழர் வானியல் அறிவு 53
(சந்திரன்) நின்ற இடத்திலிருந்த மீன் நாள் மீகுைம். அம்மீன் கின்று நிலைப்பதாக என்று கூறுவதன் பொருள்
டுே வாழ்வாயாக என்பதாம்.
அடுத்து, வெள்ளி என்னும் மீன் மழைக் கோளாகும். இம்மீன் தெற்கே விலகிச் சென்றால் மழையின்றி மண் னும் பயிரும் வளம் குறைந்து நிற்கும். இதனை,
“வெள்ளி தென்புலத் துறைய விளைவயல்
பள்ளம் வாடிய பயனில் காலை’
-புறநானூறு: 888; 1-3.
என்று மதுரை அளக்கர் ஞா மார் மகனர் மள்ளனர் குறிப்பிடுகின்றார். இது போன்றே தாமம் எனும் வால வெள்ளி தோன்றுவதும் சனி எனும் மீன் புகைவதும் ஒரு காட்டிற்கு நேரும் தீக்குறிகள் என்று கருதினர்.
“மைம்மீன் புகையினும் தூமம் தோன்றினும் தென்திசை மருங்கில் வெள்ளி ஓடினும் வயலக நிறையப் புதற்பூ மலர’
-புறநானூறு 117; 1-3.
என்பது பொய்யா காவிற் கபிலர் பாட்டு.
“பூத்தலை அரு.அப் புனைகொடி முல்லை நாத்தழும் பிருப்பப் பாடா தாயினும் கறங்குமணி நெடுந்தேர் கொள்ளெனக் கொடு த்த பரந்தோங்கு பண்பிற் பாரிப் பெருமகன்’
-புறநானூறு: 300; 9-13. என்று நனவிற் பாடிய நல்லிசைப் புலமையராம் கபிலர்’ சனி மீன் (மைம் மீன்) புகைகளோடு கூடிப் புகை
யினும், எல்லாத் திசையினும் புகை (வால் வெள்ளி)
4.