அழகியல் போற்றிய அருந்தமிழர் 93
யகம், வாகு சுட்டி என்னும் நகைகள் நவரத்தினக் கற் களாலாயவை. இவை தலையின் நடுவகிட்டில் அணியப் பட்டன. மகளிர் மூக்கிற்கு அணிக்க மூக்குத்தி குறித்துப் பழந்தமிழ் நூல்களில் செய்தி ஏதுமில்லை.
நுதலணிகள்
சங்க கால மகளிர் மகரவலயம் என்னும் நுதலணியை அணிந்தனர். சூட்டு, பட்டம், திலகம் என்னும் நுதலணி களைப் பெருங்கதை குறிப்பிடச் சிந்தாமணி முன்னிரண்டு அணிகளை மட்டும் குறிப்பிடுகிறது.
. சூட்டுப் பொலி சுடர்நுதல்’
-பெருங். 2:4-9-10.
- கதிர்பொற் பட்டமொடு கணங்குழை திருத்தி
-பெருங், 1:33:164.
o
பைம்பொற் றிலகமொடு பட்ட மணிந்து ‘
-பெருங். 3:12:223
o
சுண்ணமுஞ் சூட்டுஞ் சொரிந்து வார்குழல் ‘
-சிங்தா. 21.14:1.
சுடர்நுதற் பட்ட மின்ன
என வரூஉம் இலக்கியச் சான்றுகளேக் காண்க.
காதணிகள்
கடிப்பு, குழை, குண்டலம், தோடு, என்னும் காதணி. கள் சங்க காலத்தே காதணிகளாக வழங்கின. சிலப்பதி காரத்தில் கடிப்பு எனப்படும் கடிப்பினே, இயந்திர கிலேக்