.96 நெஞ்சின் நினைவுகள்
“வாளரம் பொருத கோணேர் எல்வளை
அகன்தொடி செறித்த முன்கை’
-நற்றிணை; 77; 9-10.
சங்கு வளையல்களோடு பொன் வளையல்களே அணியும் வழக்கமும் அன்று இருந்தது.
“பொலந்தொடி தின்ற மயிர்வார் முன்கை
வலம்புரி வளை’
-நெடுகல்வாடை: 141-42.
தொடியை அணிந்ததனுல் மகளிர் பைங்தொடியர்’ எனப் பட்டனர். தொடியும், கடகமும் முன்கையில் அணியப் பெற்றன. வெள்ளியில்ை செய்த வளைகளையும், முத்தினை அழுத்திச் செய்த தொடியினையும் ஒருங்கே மகளிர் அணிக் திருந்தனர்.
‘நீர்த்திரள் கடுக்கும் மாசில் வெள்ளிச்
சூர்ப்புறு கோள்வளைச் செறித்த முன்கை’
- அகநானூறு; 142: 16-17.
“தளைநெகிழ் பிணிநிவந்த பாசடைத் தாமரை
முளைநிமிர்ந் தவைபோலும் முத்துக்கோ லவிர்தொடி’
-கலித்தொகை; 59: 1-3.
சிலப்பதிகாரக் காப்பியத்தில் மாதவி, வைரம் கட்டிய சூடகம், பொன்வளை, பரியகம், சங்குவளை, பவழவளே முதலிய அணிகலன்களை முன்கையில் ஒருங்கே அணிந்திருங் ததாகக் குறிப்பிடப் பெறுகிருள்:
‘மத்தக மயிரொடு வயிரங் கட்டிய
சித்திரச் சூடகம் செம்பொன் கைவளை