அழகியல் போற்றிய அருந்தமிழர் 97’
பரியகம் வாள்வளைப் பவளப் பல்வளை அரிமயிர் முன்கைக்கு அமைவுற அணிந்து’
-சிலம்பு; 6:91-94.
என்பது இளங்கோவடிகள் வாக்கு.
விரலணிகள்
வேதகால மக்கள் கை, கால் விரல்களில் மோதி ரங்கள் அணிந்திருந்தனர் என்பர். மீன் வாய் திறந்திருப்பது போன்ற வடிவுடைய முடக்கு மோதிரத்தின மகளிர் விரலில் அணிந்திருந்ததாக நெடுநல்வாடை கூறும்:
‘வாளைப் பருவாய் கடுப்ப வணக்குறுத்துச்
செவ்விரற் கொளீஇய செங்கேழ் விளக்கத்து
-நெடுநல்; 143-44,
சுரு மீன் வடிவத்தில் அமைந்த மோதிரம் இன்றைய கெளிமோதிரத்தை ஒத்ததாகும். இதனை மகளிர் அணிந்த தாகக் கலித்தொகை,
- கருவிதழ் கண்டன்ன செவ்விரற் கேற்பச்
சுறவே றெழுதிய மோதிரங் தொட்டாள்”
- கலி; 84; 23.33.
என்னும் அடிகளில் குறிப்பிடுகின்றது. தம் பெயரணிந்த மோதிரத்தினை அணியும் வழக்கமும் அன்றே இருந்தது என்பதனை,
“ நாம மோதிரங் தாள்முதற் செறித்து ‘
- பெருங்; 3 : 9 : 70,
என்னும் பெருங்கதைத் தொடர் கொண்டு அறியலாம். கால் விரல்களிலும் கான் என்னும் மோதிரங்களை மகளிர் அணிந்ததாக,