பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiii புகழ்கண்டு கூசுவார். அன்பு நெஞ்சினர், குழந்தை உள்ளத்தினர், பூமனத்தினர். இனிமைப் பேச்சினர், 'இளமை விரும்பி, அமைதி விரும்பி, குறிக்கோள் வாழ்வினர். இடர்ப்பாடுகளும், இன்னல்களும் வ ந் த ேப ா து ம் கொண்ட கொள்கையிலிருந்து இறுதிவரை வழுவாமல் தடம்புரளாத் தங்கமாக- தன் மானச் சிங்கமாக, தமிழ் வேழமாக- கொள்கைக் குன்றமாக வாழ்ந்தவர். பணம், பதவி, பட்டம், பகட்டுக்குப் பணியாமலும், அரசவைப் பதவிகள் நாடி வந்தபோதும் அவைகளைப் புறக்கணித்தும் * வளையா முடியரசர்’ என்றும் வணங்கா முடியரசர்" என்றும் புகழ்பெற்றவர், தன் மானக் கொள்கையால், பல மைய மாநில அரசின் அரிய விருதுகளை இழந்தவர். பல்லாயிரம் இளைஞர்களைத் தமிழ் உணர்வாளர் களாக்கியவர். கனவிலும் கவிதை பாடுபவர். பாட்டுலகில் பாரதியாரைப் பாட்டனாகவும், பாரதிதாசனைத் தந்தை யாகவும் கருதிக் குலமுறை கிளத்தும் கொள்கை யுடையவர். "தன்னை மறந்த லயம் தன்னில் இருக்கும் இயல்பினார்; புட்டிகளின் துணையால் அன்று: எட்டியவரை சிந்திக்கும் இயல்பினால். தமது வாழ்நாளில் இறுதியாக அவர் இயற்றிய கவிதை : வாளால் பிளப்பினும் வாழ்நாள் இழப்பினும் வஞ்சமனக் கேளார் குழுமிக் கெடுதிகள் சூழினும் பூமியில்வாழ் நாளெலாம் வாட்டும் கலிவே உறினும் கற்றமிழே ஆளாதல் திண்ணம் அடியேன் கினது மலரடிக்கே.'