பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்றியுரை தி ல் வடிவில் வெளிவராமல் இருந்த என் தந்தையார் கவியரசர் முடியரசனார் அவர்களின் கவிதைகளைப் பல தொகுதிகளாகப் பிரித்து, நானே பதிப்பித்து வெளியிட எண்ணியிருந்தேன். இந்நூலிற்காக, நெஞ்சிற் பூத்தவை' என்னும் தலைப்பையும், முன்னுரை'யையும். 1990 ஆம் ஆண்டே கவிஞரிடமிருந்து பெற்றும், பல சூழல்களாலும், கவிஞர் 1990 ஆம் ஆண்டிலிருந்தே உடல் நலம் குன்றி நலிவுற்றிருந்ததாலும், நூல் ப ற் றிய தா ன மேலும் அறிவுரைகளைக் கவிஞரிடமிருந்து என்னால் பெற இயலாமல், நூல் வெளிவர நீண்ட காலமாகி விட்டது. இந்நிலையில், எந்தையும் எங்களை விட்டு உடலால் மறைந்து விட்டார். ஆனால் அவரது நெஞ்சிற் பூத்தவை: யான அவரது கவிதைகள். என்றும் மணம் பரப்பிக்கொண்டு இருக்கும். அந்த மணத்தை நுகரத் தமிழ் மக்களிடம் எடுத்து வரும் பூங்கொடி பதிப்பகத்'தார்க்கு என் நெஞ்சிற் பூக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நூல் உருவாக மூலகாரணமாக இருந்த பேராசிரியர் இரா. இளவரசு அய்யா அவர்கள் எமது இதயமார்ந்த நன்றிக்கு உரியவராவார். 19, 3ஆம் வீதி, அன்பன். காந்திபுரம், (Ք. ш тufl காரைக்குடி- 630 001.