பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னுயிர்க் காதலி மதுமலர்க் குழலி! மயங்கினேன் நின்பால் எதுகை மோனை எளிதில் வருமேல் அதனைத் தொடுவேன் அணியென இடுவேன்; திருந்திய அணிகளை வருந்திப் பெற்றுப் பொருந்தப் பூட்டிப் புகழ்ந்தது மில்லை; பூத்துக் குலுங்குமுன் புதுமுகங் காணக் காலமும் பொழுதுங் கருதிக் கருதிக் காத்துக் கிடந்து காலங் கழியேன்: கள்ளைப் பருகிக் களிமயக் குற்றென. உள்ளிற் பொங்கும் உணர்ச்சிப் பெருக்கால் அள்ளி யள்ளிப் பருகும் அவாவுடன் நின்னைத் தொடர்ந்தேன் என்னை மறந்தேன்; உணர்வுடன் கலந்து புணர்குவை யாயின் தணலும் எனக்குத் தண்புனல் ஆகும், உலகம் ஒருபொருட் டில்லை; உண்மை; விலகிட நினைவையேல் விடுவேன் உயிரை: கட்டிய மனையாள் கலங்குவள் என்றோ எட்டி நின்றனை? இல்லை யில்லை அட்டி யில்லை. அவளும் இசைந்தனள், கவிதை மணிப்பெயர்க் காதலி! என்னைத் கவியரசர் முடியரசன் E 5