பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்றும் இன்றும் சிற்றிளம் பருவம் பெற்றஅக் காலை உற்ற நற் களிப்போ ஓரள வில்லை; இரவும் பகலும் எய்துமம் மகிழ்ச்சி அறவே எனைவிட் டந்தோ அகன்றது! விளையாட் டயரும் இளையாச் சிறுவர் களியாட் டாடிக் கள்ளமில் மனத்தாற் பழகினர் நெஞ்சம் இளகினர் அடடா! கழிந்த அந் நாளைக் கருதுங் காலை உயிர்ப்பதுங் கண்ணிர் உகுப்பதும் வியப்பிலை; இரும்பின் உருளை விரும்பி உருட்டி வரும்போழ் தின்பம் வளரும் வளரும்! ஒஒ பம்பரம் ஒன்றே போதும் தாவா இன்பந் தந்தெனை வளர்க்கும்; இன்றவை எங்கே? சென்றதும் எங்கோ? இன்றென் தலையே இயங்கிடும் பம்பரம் ஒன்றிய கயிறோ ஓயாக் கவலைகள்: இறக்கை யிழந்தேன் இன்ப வானிற் பறக்க இயலேன் பறக்கினும் வீழ்வேன்; அன்றெலாம் இன்பம் அழைக்குமுன் வருமே! 26 - கெஞ்சிற் பூத்தவை